Thursday, May 26, 2011

கண்டேன்-திரைவிமர்சனம்




தமிழ் சினிமா என்றால் 6சண்டை 5 பாட்டு என்ற டிரெண்டில் இருந்து மாறிவருகிறது. நல்ல அறிகுறி கடைசியாக பார்த்த இரண்டு படங்களும் காதல் படங்கள். முதலாவது செமி முடிந்து விடுமுறையில் இருப்பதால் வார நாளிலேயே படம் பார்க்க சென்று இருந்தோம்.





அறிமுக இயக்குனர் A.C முகில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக தொடங்கிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் உள்ள சில தொய்வாலும் லாஜிக் மீறல்களாலும் சராசரியாகவே படம் இருக்கிறது . நாயகன் சாந்தனு அழகான பெண்களை மட்டுமே சிந்திப்பார் என்றவாறு அறிமுகம் ஆகி இருக்கிறார் . நாயகி ரேஷ்மி கௌதம் ஓரளவு அழகாக இருக்கிறார். ஆனால் எனக்கு சாந்தனுவின் கண் வைத்தியராக வரும் அந்த பெண்ணும் மேலும் இறுதியில் சந்தானம் கரம் பிடிக்கும் அந்த விமானப்பணிப்பெண்ணும் நிறையவே அழகாக இருக்கிறார்கள். முக்கியமான இன்னொரு நடிகரை சொல்ல மறந்து விட்டேன். வேறு யாரும் இல்ல சந்தானம் தான் இவர்தான் படாதுக்கு பெரிய பலம் இனி வரும் படங்கள் சந்தானதுகாவே ஓடும் என்ற நிலைதான் எதிர்காலத்தில்.





ஆரம்பத்தில் சாந்தனுவுக்கு அவருடய தாத்தா விஜயகுமார் ஊரில் பொண்ணு பார்த்து கல்யாண ஏற்பாடு நடக்கிறது. இறுதியில் சாந்தனு தான் சென்னயில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூற 30 நாளுக்குள் காதலியை கூட்டி வருமாறும் இல்லையெனில் தான் பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணுமாறு கூறுகிறார் விஜயகுமார். சாந்தனு சென்னை வந்து வழமையாக நடக்கும் பார்த்த உடனேயே நாயகி மீது காதல் வயப்படுகிறார் காதலியை கவருவதற்காக குருடன் என்று பொய் சொல்லி காதலிக்கிறார். பதிவு திருமணம் வரை போகும்போது உண்மை தெரிந்து விடுகிறது. பின் நாயகியின் காலில் விழுந்து மீண்டும் ஒற்றுமை ஆகிவிடுகின்றனர்(ஒரு சந்தேகம் பொன்னுகங்க கால்ல விழுந்தா எல்லாம் சரி ஆயிடுமா) பின் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பிறகு நடந்த ஒரு விபத்தில் நிஜமாகவே கண் தெரியாமல் போய் விடுகிறது. இறுதியி
ல் என்ன நடந்தது என்று வெண் திரையில் பார்த்து தெரிந்த்து கொள்ளுங்கள்.





இசை விஜய் எபநேசர் நல்ல எதிர்காலம் உண்டு. ஆரம்பத்திலேயே கலக்கியிருக்கிறார். அடுத்த தலை முறையில் ஜி.வி.பிரகாஷ்,தமன்.s போன்றோருக்கு போட்டி உண்டு. பாடல்கள் சிறப்பாக உள்ளன. (அதிலும் அந்த நர்மதா பாடல் என் நண்பன் ஒருவருக்கு நல்ல உதவி செய்கிறது) மேலும் சாந்தனு நல்லா ஆடுகிறார் என்றாலும் சக்கரக்கட்டி டாக்ஸி டாக்ஸி தான் கலக்கல். ஒளிப்பதிவு பாடல்கள் படமாக்கி இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது மொத்த்த்தில் படம் பார்க்கலாம்

Wednesday, May 25, 2011

கல்லூரிக் காலங்கள்-2

பாடசாலைக் காலங்களில் எங்களது வகுப்பு கண்டு பிடித்த அல்லது எங்களது வகுப்பால் பிரபலமாக்கப்பட்ட பின் பாடசாலையில் தடை செய்யபட்ட விளயாட்டுக்கள் இரண்டு.

1.
ஒன்று அதிகமாக அநேக பாடசாலைகளில் நடைபெறும் அதுதான் கரும்பலகையை அழிக்க வைக்கப்பட்டிருக்கும் அழிப்பானை கொண்டு விளையாடப்படும் கிரிக்கெட் இந்த கிரிக்கெட்டில் பந்து-அழிப்பான்,துடுப்பு மட்டை- கை, விக்கெட்- தூண். சில நேரங்களில் விக்கெட் இருக்காது துடுப்பாட்டவீரருக்கு பின்னால் விக்கெட் காப்பாளர் நிற்பார் விக்கெட் தூணின் குறிப்பிட்ட அளவுக்கு வெண்கட்டியால் வரையப்படும். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து குழுவாகவும், தனி பேட்டிங் ஆகவும் விளையாடலாம் பௌலிங் கைக்கு கீழாகத்தான்(Under arm) வீசலாம் தூணுக்கு எதிரே இருக்கும் அடுத்த வகுப்பறை சுவர்தான் மெயின் எல்லை ஆஃப் சைடில் ஒரு பக்க சுவர் லெக் சைட்டில் அடுத்த பக்க சுவர் இதற்கென்றே வீட்டில் இருந்து ஓவ்வொருவரும் அழிப்பான் தைத்து வருவோம். இல்லை என்றால் ஆசிரியர் வரும்போது வகுப்பில் அழிப்பான் இல்லை என்றால் அடி வாங்க வேண்டி வருமே. ஓவரு நாளும் இடைவேளையின்பொது கட்டாயம் விளையாடுவோம் ஒவ்வொரு நாளும். ஒரு நாள் விளையாடும்போது துடுபெடுத்தாடிய மாணவன் ஓங்கி அடிக்க அந்த நேரம் பார்த்து அதால் வந்த ஆசிரியர் மேல் பட்டு விட்டது. அதுக்கு பெருசா தண்டனை எதுவும் கிடைக்வில்லை ஏன் என்றால் நாங்கள் உடனே போய் மன்னிப்பு கேட்டோம் ஆனால் இது பிறகு பகுதி தலைவருக்கு தெரிந்து அடுத்த வெள்ளிக்கிழமை கூட்டதில் தடை வந்தது




2.
மேலே குறிப்பிட்ட விளையாட்டு தடை வந்ததால் எங்களுக்கு free பாடவேளைகளில் வகுப்பில் இருப்பது பெரிய கடினமாக இருந்த்து அப்போது கண்டுபிடித்ததுதான் இந்த விளையாட்டு பொதுவாக ரக்பி என்றே அழைக்கப்படும் .ஒரு மேசையின் இரு பக்கமும் ஒருவர் அமர்ந்து கொண்டு கடதாசியால் முக்கோணமாக செய்யப்பட்ட அந்த கடதாசி உருவத்தை ஒரு மேசை நுனியில் இருந்து அடுத்த மேசை நுனிக்கு மூன்று தடவை சுண்டுவதனூடாக அடுத்த நுனியில் நிலை நிறுத்த வேண்டும். அப்படி கொண்டு சென்று விட்டால் அந்த முக்கோண உருவத்தில் ஒரு பக்கம் R என்று எழுதப்பட்டிருக்கும் அடுத்த பக்கம் F என்று எழுதப்பட்டிருக்கும் அதை சுண்டி F விழுந்தால் இரண்டு கையால் கோல் காப்பு மையம் போன்று செய்து அதில் ஒரு விரல் கோல் காப்பாளராக செயற்படுவார் R விழுந்தால் ரக்பி போட்டிகளில் காணப்படும் கோல் கம்பம் போன்று இரண்டு கைகளையும் தூக்கி வைத்து இரண்டு பெருவிரலையும் மேசைக்கு சமாந்தரமாக இணைத்து ஆட்காட்டி விரல் இரண்டையும் நிலைக்குத்தாக பிடிக்க வேண்டும் இரண்டு சந்தர்பங்களிலும் கோல் கம்பக்களுக்கூடாக சென்றால் ஒரு புள்ளி கிடைக்கு.ம் எங்களது வகுப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டு குறுகிய காலத்தில் பாடசாலை முழுவதும் பிரபல்யமாகியது வேறு சில பாடசாலைகளுக்கும் பரவியது.ஆபத்தை கொண்டு வந்தது இந்த விளையாட்டும் ஒரு வெள்ளிக்கிழமை கூட்டத்தில் தடை செய்யப்பட்டது.

கல்லூரிக் காலங்கள்-1








நான் மிகவும் விரும்பும் மீண்டும் வாழ ஆசைப்படும் பருவம் பள்ளிப்பருவம் ஆகும். அதிலும் எத்தனையோ வகையான அனுபவங்கள் சாகசங்கள் என பலதும் உண்டு. அனைத்தையும் பதிவில் இடலாமென்று நினைக்கின்றேன். இந்தப் பதிவில் கல்லூரி விளையாட்டுப்போட்டி பருவத்தில் நடத்தும் கலாட்டா பற்றி சொல்லுகிறேன்.


நான் ஆரம்பக்கல்வி கற்றது திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் தரம் 3 வரை மட்டும் பின் தரம் 3, 2nd termஇல் இருந்து உயர் தரம் வரை கல்வி கற்றது உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில்தான்.


எங்களது பாடசாலையில் அதிகமாக தை மாதம் கடைசி சனிக்கிழமை விளையாட்டுப்போட்டி நடைபெறும் எனவே பாடசாலை ஆரம்பித்து முதல் வாரமே எங்களுக்கு பயிற்சிகள் தொடங்கிவிடும். பிறகு என்ன எங்களுக்கு அந்த மாதம் முழுவதும் கொண்டாட்டம்தான். முதல் வாரம் முதல் இரு பாட வேளைகளிலும் பயிற்சி நடைபெறும் அடுத்த வாரம் நான்கு பாட வேளை அதற்கும் அடுத்த வாரம் முழு நேரமும் பயிற்சி நடைபெறும்.


பயிற்சி தொடங்கிவிட்டால் மற்ற வகுப்புக்கள் எல்லாம் வரவு குறைவாக இருக்கும். ஆனால் எங்கள் வகுப்பில் முழு வரவு (மற்ற நாட்களிலும் எங்கள் வகுப்பு நிறைந்தே இருக்கும் ஹர்த்தால் அடிக்கடி நடக்கும் பாடசாலயில் மற்ற வகுப்பு எல்லாம் வெற்றிடமாக இருக்கும் ஆனால் எங்கட வகுப்பு முற்று முழுதாகவே இருக்கும் ஏன் என்றால் மேசையை உடைத்து கிரிக்கெட் அடி) அதற்காக எல்லாரும் ஏதோ விளையாட்டில் பங்குபற்றுவது என

நினைக்க வேண்டாம் விளயாடில் பங்கு பற்றும்நண்பர்கள் கஜன்,திப்ஷன்னா,தலசஜீவன்,நிதர்ஷன்,சமராஜன்,குலராஜ்,ராஜசீலன் போன்றோர் எங்களது விளையாட்டு மைதானம் பள்ளியில் இருந்து சற்று தொலைவிலேயே அமைந்துள்ளது. இரண்டு மூன்று பாதையால் செல்லலாம் இப்ப ஒரு பாதை மட்டுமே ஏனெனில் நாங்க பாவித்த வழி எங்களுக்கு தெரியும்தானே நாங்கள் மாணவர் தலைவர்களாக வந்த பிறகு மற்ற பாதை எல்லாவற்றுக்கும் மூடு விழா. பயிற்சி தொடங்கி முதல் ஒன்று இரண்டு

நாள் அனைவரும் அவர் அவர் இல்லங்களில் பிக்னல்,நியூட்டன்,பிறவுண்,செல்லையாவில் இருப்போம்.


அதன் பிறகு எங்கள் வகுப்பு மாணவர்களை அடுத்த வாரம் முதல் இடை இடையே காணக்கிடைக்காது. திட்டம் தீட்டப்பட்டு எல்லாரும் எங்களின் பிக்னல் இல்லத்துக்கு அருக்காமையில் வந்து சேர்ந்து இருவர் மூவர் அணிகளாக பிரிந்து தண்ணீர் குடிக்க போவதகா சொல்லி விட்டு அனைவரும் துவாளி பிள்ளையார் கோவிலுக்கு சென்று சேர்ந்து விடுவோம் பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி பந்து,துடுப்பு மட்டை எல்லாம் அருகில் உள்ள வீட்டில் எடுத்து வந்து அந்த நாள் முழுவதும் கிரிக்கெட் தான் இன்றும் அது போன்ற நாட்கள் எப்போது வரும் என்று ஏங்குவது உண்டு.

சில நாட்கள் ஆசிரியர்களிடம் பிடிபட்ட அனுபவமும் உண்டு மைதானத்தில் பயிற்சி முடிந்ததும் மணி அடிக்கப்படும் ஆனால் நாங்க போடுற சத்ததுக்கு இதெல்லாம் எங்க கேட்கிறது கைக்கடிகாரம் கட்டுவதுக்கும் தடை மற்ற மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு போய்விடுவார்கள் எங்கள் வகுப்பு மட்டும்‌ வெட்ட வெளியாக இருக்கும் பின் நாங்கள் விளையாடி முடிந்து வகுப்புக்கு போகும்போது பிரதி அதிபர்,வகுப்பாசிரியர், எங்களது தொகுதிக்கு பொறுப்பான ஆசிரியர் பார்துக்கொண்டிருப்பார்கள் ஆனால் எங்கட வகுப்புதான் ஒற்றுமை ஆச்சே எல்லாருக்கும் சேர்த்து தான் தண்டனை. வகுப்பாசிரியர் வழமை போல அறிவுரை வழங்குவார் அது அந்த மாதம் முடியும் மட்டும் எங்களுக்கு கேட்காது எங்களின் வகுப்பு ஒற்றுமை பற்றி பாடசாலை முடிந்த பின் ஒரு நாள் அதிபர் சொல்லி இருந்தார் கடைசி வரை நான் எவ்வளவோ கேட்டும் சொல்லவில்லை என்று ஆனால் எனக்கு உயர்தரத்தில் மாணவிகள் வந்த பிறகு வகுப்பு ஒற்றுமை முதல் இருந்தது போன்று இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது. இது பற்றி இன்னொரு பதிவில் கூறுகிறேன்.

சாதாரண தரம் , உயர்தரம் வந்த பிறகு எங்களுக்கு துவாளிப்பிள்ளையார் கோவிலுக்கு போவது இலக்குவாகியது ஆசிரியர்களிடம்‌ இந்த பக்கம் சில மாணவர்கள் சென்றனர் கூட்டிக்கொண்டு வருகிறோம் என்று அங்கு சென்று விடுவோம் ஆனால் உயர்தரம் வந்த பிறகு நான் உட்பட எங்கள் வகுப்பில் பல பேர் இல்லத்தலைவர், விளையாட்டு தலைவர் செயலாளர்களாக இருந்தோம். அந்த நேரத்தில் எங்களது அந்த இடம் பெரிதும் உதவியது அங்குதான் கூட்டி வந்து ஈட்டி,தட்டு,குண்டு போன்ற விளையாட்டுகளுக்கு தெரிவு வைத்து எடுப்போம். பின் வேறு இல்லம் என்று பாராது அந்த போட்டிகளில் திறமையான எங்களது வகுப்பு மாணவர்களால் பயிற்சி வழங்குவர். பின் அணிநடை பயிற்சி அவர் அவர் இல்லங்களுக்கு வழங்குவோம்.

அப்படி இருந்தும் எங்களது சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க முடியாதுதானே ஒரு குறிப்பிட நேரத்துக்கு பிறகு பயிற்சி வந்தோரை அனுப்பிவிட்டு மீண்டும் எங்கள் கொண்டாடம் கிரிக்கெட்,அரட்டை உயர்தரத்தில் எங்கள் பயணம் நீண்டது துவாளி பிள்ளையாரில் இருந்து அம்மன் கோவில் வரை சில நேரம் வல்லை வரை அதிலும் உயர்தரம் வந்த பின்னும் கீஸ் கொடுத்து விளையாடினோம். பிள்ளையார் கோவில் தேர்முட்டியோ அம்மன் கோவில் தேர்முட்டியோ தான் கீஸ் பெட்டி 5 கிலோ மீட்டர் வரை ஓடுவோம். அந்த நேரம் நெல் வயல் வாய்க்கால் ஊடாகாதான் ஓட வேண்டும் வயலுக்குள் விளுந்தால் சரி சேட் முழுவதும் சேறு தான் பின் சேர்டை கழற்றி தோய்த்து போட்டு விட்டு பெனியனுடன் மீண்டும் விளையாட்டு அந்த காலங்கள் மீண்டும் எப்போது வரும் என்று ஏங்கி…..

அந்த நேரத்தில் எங்களிடம் செல்பேசியோ டிஜிட்டல் கமராவோ இல்லை. எங்களின் நண்பர் குழாமிடம் ஒரு MP4 ப்ளேயர் இருந்தது அதில் படங்கள் எடுத்திருந்தோம். நண்பர்களே உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Sunday, May 8, 2011

எங்கேயும் காதல்

போக்கிரி,வில்லு ஆகிய படங்களுக்கு பிறகு பிரபுதேவாவின் மூன்றாவது தமிழ்படம்.இந்தியாவில் 11 மாதம் Sincere ஆக வர்த்தகம் செய்து 1 மாதம் பாரிசில் விடுமுறையைக் களிக்கும் உல்லாச பேர்வழி ஜெயம் ரவி(கமல்) பிரான்சில் வாழும் இந்திய கலாசார பொண்ணு(?) என அறிமுகப்படுத்தப்படும் ஹன்ஸிகா(கயல்விழி/லொலிட்டா) இருவருக்கும் இடையேயான காதல்தான் திரைக்கதை இருவரையும் சுத்தியே திரைக்கதை பின்னப்பட்டுளது.


அறிமுக காட்சியில் பிரபுதேவா அசத்தலாக எங்கேயும் காதல் பாட்டுக்கு ஆட்டம்போடுகிறார். பின்பு பிரகாஷ்ராஜ் வரும்போது நீங்க இந்த படத்தில இல்லைனு சொல்லும்போது தியேட்டரில் கைதட்டல் பறக்கின்றது.மேலும் படத்தில் நகைச்சுவைக்காக வரும் ராஜூசுந்தரம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். அதிலும் உடற்பயிற்சி கூடத்தில் வரும் நகைச்சுவை கைதட்டல் வாங்குகிறது.





நாயகன் ஜெயம் ரவி நடன அசைவுகள் சிறப்பாக உள்ளன நடிகர் நடிக்க வேண்டிய இடங்களில் நடித்துள்ளார் சரியான தேர்வு. நாயகி நான் இணையத்தளத்தில் வாசித்தது போன்று மந்த்ரா பேடி போன்று ஹோர்மோன் ஊசி போட்டுதான் வளந்திற்பாரோ ?நங்கை பாட்டில் சேலையில் அழகாக இருக்கிறார். மற்ற இடங்களில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை உண்மையிலேயே 16 வயது குழந்தையோ? கவர்ச்சியில் மட்டும் தாராளம் காட்டுகிறார். போகிற போக்கை பார்த்தால் நமீதாவை தூக்கி விளுங்கி விடுவார் போல.



படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்றாலும் ஆரம்ப பாடலான எங்கேயும் காதல் மற்றும் நங்கை பாடல் மட்டுமே படமாக்கப்பட்ட விதம் கவர்கிறது. அதிலும் நங்கை பாடலின் நடன ஆசைவுகள் கண் கவர்கிறது. மேலும் பாடல் தொகுப்பில் இடம்பெறாமல் surprice ஆக வைக்கப்பட்டிருந்த குளு குளு வெண்பனி போல பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அந்த பாடலை எழுதியது ஹரிஸாம் இனி மற்ற கவிஞர்களிற்கு போட்டியாக வருவார் போல பாடலின் வரிகளும் என்னை கவர்ந்துள்ளது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவுதான் படத்துக்கு பெரிய பலம் மனிதர் காதல் தலைநகரத்தை இன்னும் அழகாக காட்டியுள்ளார்.





முதல் பகுதியில் திரைக்கதையில் உள்ள தொய்வு இரண்டாம் பகுதி சிறப்பாக இருந்தாலும் மொத்ததில் படம் சரசரியாகவே உள்ளது முதல் நாள் முதற் காட்சி வெற்றியின் அனுசரணயில் இலவசமாக பார்த்தோம்.

Saturday, May 7, 2011

இங்கிலாந்தும் கேப்டன்களும்


கடந்த வாரம் இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஒரு நாள் போட்டிகளுக்கு குக் கேப்டனாகவும் 20-20 போட்டிகளுக்கு பிராட் கேப்டனாகவும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்ராஸ் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் குக் பங்களாதேஷ் போட்டிகளில் கேப்டனாக செயற்பட்ட அனுபவம் உண்டு.பிராடுக்கு இதுதான் முதல் சர்வதேச கேப்டனாக அறிமுகம். இதற்கு விளையாட்டு விமர்சகர்களால் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அதிலும் பிராடுக்கும் நடுவர்களுக்குமான உறவு பற்றி கேள்வி எழுப்பபட்டுள்ளது? பிரோட்டின் நடவடிக்கைகள் மைதானத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. எனவே இவர் எப்படி அணியை கையாளப்போகிறார்? மேலும் பிராட் நெருக்கடியான நேரங்களில் துல்லியமாக பந்து வீசுபவர் அல்ல .
அடுத்து குக் இவர் இதுவரை 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 33 என்ற சராசரியில் 858 ஓட்டங்களை குவித்துளார். இவரின் Strike rate 71.38 ஒரே ஒரு சதம் இந்தியாவுக்கு எதிராக 2007இல் அடித்துள்ளார். எனவே ஆரம்ப துடுப்பாட்டவீரராக அதிரடியாக இவரால் விளையாடமுடியுமா என்ற கேள்வி முன்வைக்கபட்டுள்ளது. மேலும் இவரது ஆட்ட நுணுக்கங்கள் பற்றியும் கேள்வி முன்வைக்கபட்டுள்ளது. இவரது Strokes Playஇன் Power பற்றி கேள்வி முன்வைக்கபட்டுள்ளது.
மொத்தில் அடுத்து வரும் இலங்கைக்கு எதிரான தொடர்தான் இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். இலங்கை கிரிக்கெட் சபை போன்று விரைவில் வீட்டை போக வேண்டியவர்களுக்கெல்லாம்கேப்டன் பதவி கொடுக்காமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கொல்லிங்வூட்,பிட்டர்சன் போன்ற மூத்த வீரர்களுக்கு கேப்டன் பத்வி வழங்காமல் செய்ற்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.