Saturday, December 31, 2011

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-1

முற்குறிப்பு-இப்பதிவு முற்றுமுழுதாக நகைச்சுவை உணர்வோடே   எழுதப்படுகிறது. இதில் வரும் பதிவர்கள் மனம் ஏதும் நோகும்படி இருந்தால்,கூறினால் நீக்கப்படும்.

நாட்டிலே இருக்கும் அரசியல் கட்சிகளால் ஏதும் பயனில்லை என்று உணர்ந்த மக்கள் அடுத்த நடைபெற்ற தேர்தலில், பதிவுலகில் நடைபெறும் அரசியல்களை எல்லாம் பார்த்த மக்கள் இதை விட மிகச்சிறப்பாக அரசியல் நடத்தகூடியவர்கள் வேறு ஒருத்தரும் இல்லை என்பதை உணர்ந்து பதிவர்களையே பாராளுமன்றிற்கு தெரிவு செய்கிறார்கள்.


                                                                                       பதிவர்கள் எல்லோரும் பாராளுமன்றில் வீற்றிருக்கின்றனர். அப்போது சபாநாயகர் பதிவர் ஜனா பாராளுமன்றில் வருகை தருகிறார் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கின்றனர் அப்போது பதிவர்,மகளிர் விவகாரதுறை அமைச்சர் மருதமூரான் மட்டும் சபாநாயகர் வருவதையே உணராது தொலைபேசியில் பேஸ்புக் அரட்டையில் தேவதைகளுடன் ஒரு பக்கம் மிதந்து கொண்டு மறுபுறம் காதல்ரசம் சொட்டும் ஸ்டேட்டஸ்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்.திடீர் என்று சபாநாயகர் வருவதை உணரந்து எழுந்து நிக்கிறார்.சபாநாயகர் சென்று தனது ஆசனத்தில் அமர்ந்ததும் அவை தொடங்குகிறது. பதிவுலகில ஆணாத்திக்கம் என்று பல பேர் அடிக்கடி குறைபட்டு கொள்வதால் சபாநாயகர் முதலில் மகளிர் விவகார துறை அமைச்சர் மருதமூரானை உரையாற்ற அழைக்கிறார். மருதமூரான்  "விலகியோடும் குழந்தையை சுற்றியிருக்கும் தாயின் அக்கறை மாதிரி, 'காதல்' மீதான அக்கறையும் அது இழக்கப்படும் சந்தர்ப்பங்களில் தான் அதிகரிக்கிறது!! " என்று தான் பாராளுமன்றில் நிக்கிறோம் என்பதை உணராது பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடும் நினைப்பில் உரையாற்றுகிறார். மற்ற உறுப்பினர்களும் ரசித்து கொண்டிருக்க பதிவர் சினிமாதுறை அமைச்சர் ஜீ எழுந்து யோவ்வ் இங்க என்ன நடக்குது என்று பெண்கள் மேல் உள்ள வெறுப்பால் கத்த அப்போதுதான்   அரசாங்க பிரதம கொறடா அதிகார மையம் நிருஜா எழுந்து என்ன மருதமூரான் சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறீர் அமரும் என்கிறார்.

                                                                                                                                             அதை தொடர்ந்து சபாநாயகர், தன்னை (எதிர்க்கட்சி தலைவர் ) பேச அழைப்பார் என்று எதிர்பார்த்த நிரூபனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது சபாநாயகர் எதிர்க்கட்சி பிரதம கொறடா,சமய விவகார அமைச்சர் பதிவர் ஐடியாமணி அவர்களை அழைத்தார். ஐடியாமணியும் எழுந்து மனிதஉரிமைகள் காக்க படவேணும் கல்லால் எறிந்து கொள்ளவது தடைசெய்ய படவேணும், ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.


தொடரும்......


நேரம் இன்மையால் பதிவு குறுகிவிட்டது மன்னிக்கவும்.

Tuesday, November 22, 2011

பிரகாசிக்கும் இளம் நட்சத்திரங்கள்

இந்த பருவ காலத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக இளம் வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். முக்கியமாக டெஸ்ட் போட்டிகளில் எனவேதான் இப்போதும் டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன. எந்த இளம் வீரர்கள் சாதித்ருக்கிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.

1.பற் கம்மின்ஸ்
18 வயதேயான கட்டிளம் காளையான இவர் இந்த தென்னாபிரிக்காவுக்கான தொடரிலேயே T20,ஒருநாள்,டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார். முதலிரண்டு T20 போட்டிகளிலேயே தனது அதிவேகத்தால் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்து 5 விக்கெட் கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலும் அறிமுகத்தை மேற்கொண்டு 5 விக்கெட் கைப்பற்றியிருந்தார். எனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் அணியை தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கு மிக நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தார். இறுதி நேரத்தில் அணியில் இடம் பெறாமல் போனார் இவர் உடல்நிலை டெஸ்ட் போட்டிகளுக்கு ஒத்துளைக்குமா என்றும் கேள்வி எழுப்பட்டது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஹாரிஸுக்கு பதிலாக இடம் பெற்றார். முதல் இன்னிங்சிலேயே சிறப்பாக பந்து வீசினார் இவரது லைன்&லெந்த் சிறப்பாக இருந்தது ஆனாலும் ஒரு விக்கெட்டே  கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்சில் மிகச்சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை சாய்த்த்தது மட்டுமில்லாமல் இறுதி நேரத்தில் துடுப்பாட்டத்திலும் கை கொடுத்து ஆஸி அணியின் வெற்றிக்கு துணை புரிந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் உயரமாக இருப்பதால் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பெறுவதும் இலகு, தொடர்ச்சியா140Km/h என்றவேகத்தில் பந்து வீசுவது கூடுதல் பலம். மிக இளம் வயதை கொண்டிருப்பதால் நிறைய சாதிப்பதுக்கு வாய்ப்பு உண்டு எதிர்கால ஆஸி அணியின் பந்துவீச்சு தலமைஆயுதமாக வர்ணிக்க படுகிறார்.



2.வெரோன் பிளண்டர்
இவர் 2007 கால பகுதியில் தென்னாபிரிக்க அணிக்காக T20,ஒருநாள் போட்டிகளில் சகலதுறை ஆட்டக்காரராக அறிமுகத்தை மேற்கொண்டு இருந்தாலும் அந்நேரம் அவ்வளவாக சாதிக்கவில்லை.இருந்தும் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சாதித்து வந்ததால் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்தார். ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் டொஸ்டோபேயை பின்னுக்கு தள்ளி விட்டு அணியில் வாய்ப்பு பெற்றார். ஆரம்பத்தில் இவரது உள்ளடக்கம் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.ஆனாலும் இவரது சொந்த மைதானம் என்பதால் இவருக்கு சாதகமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் கைப்பற்றிய இவர் இரண்டாவது இன்னிங்சில் ஆஸி அணியை உருட்டி எடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டேய்ன் போன்று வேகமாக இல்லாவிட்டாலும் நேர்த்தியாக பந்து வீசியதால் விக்கெட் வேட்டை நடாத்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரண்டாவது போட்டியிலும்முறையே 1,5 விக்கெட் கைப்பற்றினார். இப்போது தென்னாபிரிக்காவுக்கு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரும் கிடைத்து விட்டார் இப்போது அச்சுறுத்தும் வேகப்பந்து கூட்டணியை கொண்டு உள்ளது.


3.ஜூனைட் கான்
21 வயதேயான இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் தனது டெஸ்ட் அறிமுகத்தை ஜிம்பாப்வே அணிக்கெதிராக மேற்கொண்டிருந்தார் . ஆனால் அந்த போட்டியில் சாதிப்பதுக்கு போதியளவு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அடுத்து நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மத்திய கிழக்கு தட்டை ஆடுகளங்கிலேயே 12 விக்கெட்களை கைப்பற்றினார். இவரது லைன்& லெந்த் சிறப்பாக உள்ளது மேலும் இவரும் தொடர்ச்சியாக வேகமாக பந்து வீசுகிறார். பாகிஸ்தான் மட்டும் எப்படியோ வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் அக்ரம்,ஆமிர்,தன்வீர் வரிசையில் இப்போ இவர். இவரும் மிக இளம் வயதேயே கொண்டிருப்பதால் சாதிக்க நிறைய உண்டு.

.

4.கேர்க் எட்வர்ட்ஸ்
27 வயதான இவர் மேற்கிந்திய அணிக்காக விளையாடுகிறார். அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கெதிராக சதமடித்தவர். இப்போது ஆறு போட்டிகளில் 2சதம் 3 அரைச்சதம் உட்பட 61.88 என்ற மிகச்சிறந்த சராசரியில் 557 ஓட்டங்களை குவித்துள்ளார். மீள கட்டி எழுப்பபட்டு கொண்டிருக்கும் மேற்கிந்திய  அணிக்கு முட்டு கொடுக்கும் ஒரு தூணாக இருந்து வருகிறார்.




5.ரவிசந்திரன் அஷ்வின்
25 வயதான இவர் ஒருநாள்,T20 போட்டிகளில் போன வருடம் அறிமுகமாகி முறையே 35,4 விக்கெட்களை வீழ்த்தி தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளை வழங்கி டெஸ்ட் அணியின் கதவுகளை தட்டிய வண்ணமே இருந்தார். இப்போதுதான் ஹர்பஜனின் மோசமான போர்ம் காரணமாக அணியில் இடம் கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட அஷ்வின் முதல் போட்டியிலேயே 3,6 விக்கெட்களை முறையே ஒவ்வொரு இன்னிங்சில் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இப்போது நடந்து கொண்டிருக்கும் தொடரில் 15 விக்கெட்களை இதுவரை கைப்பற்றி ஆஸி தொடருக்கு செல்லும் அணியில் தனது இடத்தை உறுதிபடுத்தி இருக்கிறார். ஆனால் இவருக்கு அங்குதான் சவால் காத்திருக்கிறது, இந்திய ஆடுகளங்கள் வழமையாகவே சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பவை ஆஸியில்தான் இவரின் மீதி திறமைகள் தெரியும்.



















மேலே குறிப்பிட்டவர்களை தவிர இந்த பருவ காலத்தில் ஆஸி அணிக்காக மிட்செல் மார்ஷ்,இந்திய அணிக்காக வருண் ஆரோன் ஆகியோர் அறிமுகம் புரிந்துள்ளனர். மிட்சல் மார்ஷ் ஆஸி அணியில் எதிர்காலத்தில் சைமோண்ட்ஸ் இடத்தை நிரப்புவார் என எதிர்பாக்கிறேன். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த வாரம் கூட உள்ளூர் போட்டியொன்றில் மிகச்சிறப்பாக பந்து வீசியிருந்தார்.மேலும் இறுதி நேரங்களில் அடித்தாடக்கூடிய துடுப்பாட்ட வீரரும் கூட. அடுத்தவர் ஆரோன் இந்தியாவிலேயே மிக வேகமாக பந்து வீசுபவர் என்ற ரீதிலேயே வந்துள்ளார் அணிக்குள், இவரது உள்ளூர் போட்டிகளின் பெறுபேறுகள் கூறிக்கொள்ளும்படியாக இல்லை. இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அறிமுமாகி இன்று நடைபெறும் மேற்க்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகி இருக்கிறார். இன்றைய போட்டியில் இவர் அதிகளவான ஷாட் பிட்ச் பந்துகளையே வீசுகிறார், அருமையாகவே நேர்த்தியான பந்துகளை வீசுகிறார் கவாஸ்கார் கூறியது போன்று முதல் நாள் பதட்டமாக இருக்கலாம், மும்பை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை. இவரையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, October 27, 2011

ரா-ஒன்

வேலாயுதம்,ஏழாம்அறிவு இரண்டு படமும் பார்தாச்சு இன்று ரா-ஒன் பார்ப்பம் என்று மஜெஸ்டிக் சிட்டி திரையரங்குக்கு சென்று இருந்தேன் இதுதான் நான் முதன் முதலாக திரையரங்கில் பார்க்கும் ஹிந்தி படம்.என்றாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே சென்று இருந்தேன். ஏனெனில் கிட்டடியில் கிடைத்த அனுபவம்.
  
                        படத்தின் கதை இதுதான் ஷாருக்கான் ஒரு கணனிவிளையாட்டுக்கள் உருவாக்கும் நிறுவனத்தில் லண்டனில் வேலை செய்கிறார்.ஷாருக்கான்,கரீனா கபூர் திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறான்.அவன் பாடசாலையில் கல்வி கற்கிறான்.இந்த நேரத்தில் ஷாருக்கான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு புதிய கணனி விளையாட்டை உருவாக்கும் செயற்றிட்டம் வருகின்றது ஷாருக்கான் தலைமையில் கணனி விளையாட்டு உருவாக்கிறார்கள்.அதில் உருவாகும் வில்லன் நிஜத்திலேயே உலகத்துக்கு வந்து விளையாட்டை உருவாக்கிய ஷாருக்கானை கொன்று விடுகிறான்.அந்த வில்லன்தான் ரா-ஒன் இதை தடுக்க ஜி‌-ஒன் வந்து எப்புடி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ளார்கள்.எப்படி ரா-ஒன்னை அழித்து யாரை காப்பாற்றுகிறார் என்பதை திரையில் கண்டு கொள்ளுங்கள்.



                                                                        ஷாருக்கான் கொடுத்த விளம்பரங்கள் வீண் போகவில்லை நிச்சயமாக படம் வசூலில் முன்னுக்கு வரும்.ஷாருக்கான் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்.அவரின் மகனான நடிக்கும் சுட்டி பையனும் நன்றாக நடித்து உள்ளான். ஆனால் இந்த சுட்டி பையனுக்கு இவ்வளவு திறமை இருக்குமா என்றது லாஜிக் மீறல். கரீனா கபூருக்கு இப்போ ஒரே ஏறுமுகமாக இருக்கிறது அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். பாடல்கள் ஏலவே வந்து ஹிட் ஆகினாலும் திரைஅமைப்போடு சேர்ந்து மேலும் ஹிட் ஆகும். ஏகோன் பாடிய இரண்டு பாடலிலும் கரீனா,ஷாருக்கின் நடனஅசைவுகள் சூப்பர்.சண்டைக்காட்சிகள்
அட்டாகாசமாக படமாக்கியுள்ளார்கள். ரயில் காட்சி,லண்டன் வீதியில் படமாக்கிய காட்சி என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.அட மறந்திட்டன் ரஜினியும் ஒரு காட்சியில் வந்து போகிறார ஆனால் ஊடகங்கள் எழுதியது போன்று ஷாருக்கை காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக இல்ல. சில ரஜினி அடிபொடிகள் சொல்லுவது போல ரஜினிக்காண்டிதான் படம் ஓடும் என்பது வீண் பேச்சு.ஆனால் ரஜினிக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கிற்றார் ஷாருக்.

                     இந்த பதிவு யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் இருந்து எழுதிகொண்டு இருக்கிறேன் படம் இன்று பின்னேரம் பார்த்த்வுடன் விம்ர்சனம் எழுத  வேண்டும் என்ற அவாதான் உடனே பதிவு இட தூண்டியது. இப்ப பஸ்ஸில் ஏழாம் அறிவு போடுகிறார்கள். மொத்தத்தில் தீபாவளிக்கு வந்த ஏழாம் அறிவு திரைக்கதையின் வேகமின்மையாலும்,வேலாயுதம் இரண்டாம் பகுதி மறுபடியும் வழமையான விஜய் படத்தை நினைவு படுத்தியதாலும் ரா-ஒன் இரண்டையும் முற்றுமுழுதாக விழுங்கி விட்டது நான் ஹிந்தியில் ஆங்கில உபதலைப்புகளுடன் பார்த்தேன்.


Tuesday, October 25, 2011

ஏழாம் அறிவு

இன்று முதல் நாள் முதல் ஷோ பார்க்க பாமங்கடை ஈரோசில் பின்னேரம் சென்று இருந்தேன். சூரியா,முருகதாஸ் படம் ஸ்ருதி தமிழில் அறிமுகம் பிரமாண்ட விளம்பரம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நேரத்துக்கே சென்றிருந்தோம். ஆனால் எதிரிபார்த்த ரசிகர்கள் வரவில்லை. படம் 3.10 மணிக்குத்தான் போட்டார்கள். 



                                                               ஆரம்பத்தில் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பல்லவ மன்னனின் 3வது மகனான போதிதர்மா அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்குகிறார் மருத்துவம்,தற்காப்பு கலைகளிலும் கலக்குகிறார். பின் தனது குருமாதா அறிவுரை கேட்டு சீனாவுக்கு பயணமாகிறார் அங்கு ஒரு கிராமத்தில் வைரஸ் நோய் பரவுகிறது போதிதர்மா தான் கற்ற மருத்துவ கலையின் மூலம் குணப்படுத்த முடியாத நோயை குணப்படுத்துகிறார். பின் அக்கிராமத்துக்கு வரும் தீயவர்களை தான் கற்ற கலைகள் மூலம் பந்தாடுகிறார். உடனே அக்கிராமத்து மக்கள் கேட்டு கொண்டதுக்கு இணங்க கலைகளை போதிக்கிறார். அவர் போதித்த கலையான ஷாலோய்ன் இன்றும் சீனாவின் முக்கிய ஒரு தற்பாதுகாப்பு கலையாகும் இன்றும் சீனாவில் கோவில் கட்டி வழிபடுகிறார்களாம் இத்தனைக்கும் போதிதர்மா ஒரு தமிழர். பின் போதிதர்மா சொந்த நாட்டுக்கு பயணிக்கும்போது சீனாவில் போதிதர்மா புதைக்கபட்டால் ஒரு நோயும் வராது என்பதற்காக போதிதர்மா நஞ்சுணவு உட்கொண்டு இறந்து போகின்றார். இந்த வரலாறு போதிதர்மா பற்றி சீன,தாய்லாந்து மக்களுக்கு தெரிந்திருக்கிறது தமிழர்களுக்கு தெரியவில்லை இந்த விடயத்தை வெளிக்கொணர்ந்ததுக்கு முருகதாசை பாராட்டியே ஆக வேண்டும்.



                                                                                                                                                 இனி கதை நிகழ் காலத்துக்கு வருகிறது. ஸ்ருதி ஒரு விஞ்ஞானி நரம்பியல் அணுக்கள் பற்றி ஆராய்கிறார் மூன்று வருடங்களாக அவர் ஆராய்ந்து முடிவில் ஒரு மனிதனுடைய நரம்பியல் அணுவில் அதன் பரம்பரை எச்சங்களை தூண்டிவிடுவதன் மூலம் அதே திறமைகளை கொண்டுவரமுடியும் என்று கண்டுபிடிக்கிறார்.போதிதர்மாவின் பரம்பையினரை கண்டு பிடித்து அவர்களின் பரம்பரை அலகுகளை தூண்டி விடுவதன் மூலம் போதிதர்மாவின் திறமைகளை கண்டுபிடித்து அதன் மூலம் மருத்துவ துறையில் முன்னேற்றம் கொண்டு வரலாம் என்று புறப்படுகிறார். இது பற்றி போதிதர்மா முன்பு எழுதிய நூலிருந்தே தெரிந்து கொள்கிறார்.அந்த போதிதர்மாவின் வாரிசு வேறுயாருமல்ல சர்கஸ் கலைஞர் சூரியாதான் அவரை பின்தொடர்ந்து அவரை உறுதிபடுத்தி கொள்கிறார். இதற்கிடையில் சூரியா ஸ்ருதி மீது காதல் கொள்கிறார் ஒருகட்டத்தில் ஸ்ருதி பற்றி உண்மை தெரியவர சூரியா மனமுடைந்து போகின்றார்.


                                                                                                       இதே நேரம் சீனாவில் இருந்து ஆபரேஷன் ரெட்டுக்கு இந்நாள் போதிதர்மா ஆச்சிரமத்தின் முதன்மை சீடன் தேர்ந்தெடுக்கபட்டு இந்தியா வருகிறான். அவன் இந்தியாவில் வந்து என்ன செய்தான்? சூரியா ஸ்ருதி இறுதியில் சேர்ந்தார்களா? சூரியா,ஸ்ருதி நாட்டுக்கு வந்த ஆபத்தை எப்படி காபாற்றினார்கள் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

                                                                     படத்தில் சூரியா,ஸ்ருதி அருமையாக நடிப்பை வெளிக்காட்டியிருந்தாகள் மேலும் டொன்லீயாக நடித்த நடிகர் பற்றி சொல்லவே நடை,பார்வை தொடக்கம் அனைத்திலும் கூர்மையாகவே இருந்தார். பாடல்கள் ஆரம்ப சீன மொழி பாடலின் பின்னணி இசை என்னை கவர்திருந்தது. அடுத்த பாடல் முன்னந்தி சாரல் நீ ஏலவே கேட்ட இசையாக இருந்தாலும் மனதுக்கினியதாக இருக்கிறது முத்துக்குமாரின் கவித்துவ வரிகளோடு சேர்ந்து மேலும் இப்பாடலில் ஸ்ருதி நீருக்கடியில் வரும் சிறு நடனஅசைவுகள் என்னை கவர்திருந்தது,யம்மா யம்மா பாடலில் இறுதியில் சூரியா செய்யும் நடன அசைவுகளும் ஆர்ப்பாடமில்லாமால் நன்றாக இருக்கிறது. இன்னும் என்ன தோழா ஓட்டவில்லை ஏலே ஏலமா எனக்கு பிடித்திருந்தது என்ன ஸ்ருதி இடையில் தமிழ் கொலை செய்கிறார். மொத்தத்தில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை இதுக்கு முக்கிய காரணம் தல ஸ்டைலில் உதயநிதி ஸ்டாலினுக்கு சொன்னால் ஓவர் விளம்பரம் படத்துக்கு ஆகாது. சராசரி படம், பார்க்கலாம்.

Saturday, October 1, 2011

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய கிரிக்கெட் விதிகள்

இன்று அதாவது அக்டோபர் முதலாம் திகதி முதல் ஐ‌சி‌சியின் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. இருந்தும் அக்டோபர் 11 வரை ஒரு சர்வேதச போட்டிகள் இல்லாமலிருப்பதால் அன்று நடக்கும் மேற்கிந்திய,பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான T20 போட்டிதான் இவ்விதிகளுக்கு அமைய நடக்கும் முதல் போட்டி. அது என்ன புது விதிகள் அதை நாங்களும் பார்ப்போமே.


இனி நீங்கள் மேலுள்ள காட்சிகளை காணமுடியாது. ஆம் இனி இருபது-இருபது,ஒரு நாள்,டெஸ்ட் என அனைத்து வகை போட்டிகளிலும் காயமடைந்த ஒரு ஆட்டக்காரருக்காக இன்னொரு மாற்று ஆட்டகாரர் களமிறங்கி ஓட முடியாது.அவ்வாறான சந்தர்ப்பங்களில் துடுப்பாட்டவீரர் பெவிலியன் சென்று மீண்டும் இன்னிங்சின் இறுதி தருணங்களில் ஆட முடியும்.என்னை பொறுத்தவரை இது முற்றிலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிரானது ஏனெனில் பந்து வீச்சாளர்கள் தசை பிடிப்பு இன்ன பல காரணம் சொல்லி பெவிலியன் சென்று மீண்டும் பந்து வீசுகிறார்கள்தானே அப்பிடி என்றால் இதையும் தடை செய்ய வேண்டும்.

                                                                                              அடுத்து இதுவும் அனைத்து வகையான போட்டிகளிலும் வருகிறது. துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டம் எடுக்கும் போது விக்கெட்டுகளுக்கிடையில் ஓடும்போது களத்தடுப்புக்கு இடையூறாக நடந்து அதை களத்தடுப்பில் ஈடுபடும் அணி நடுவரிடம் முறையிட்டால் நடுவர் துடுப்பாட்டவீரர் வேண்டுமென்றே செய்ததாக கருதினால் களதடுப்புக்கு இடையூறு செய்தார் என்ற வகையில் ஆட்டமிழப்பு வழங்கலாம்.இந்த விதி ஒரு ரன்-அவுட் துடுப்பாட்டவீரரால் இடையூறு செய்யபட்டதா /இல்லையா என்ற தருணங்களில் பொருந்தாது.இதத்தருணங்களில் மூன்றாவது நடுவருடன் கள நடுவர்கள் ஆலோசித்து முடிவு எடுப்பர்.

                                                               இவ்விதியும் அனைத்து போட்டிகளுக்கும் செல்லுபடி ஆகிறது. என்னவெனில் இதுவரை காலமும் பந்து வீச்சாளர் பந்து வீச ஓடி வரும்போது அந்த முனையில் உள்ள துடுப்பாட்ட வீரர், பந்து வீச்சாளர் தனது பின்னங்காலை கிரீஸில் பதிக்க முன் ஓட வெளிக்கிட்டால் பந்து வீச்சாளர் விக்கெட்டை தகர்த்தால் அந்த எதிர் முனையில் உள்ள துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்து விடுவார்.இப்போதைய திருத்தி அமைக்கபட்ட விதிகளின்படி பந்து வீச்சாளர் தனது பந்தை கையில் இருந்து செலுத்த முன் துடுப்பாட்டவீரர் ஓட முனைந்தால் அந்த பகுதியில் உள்ள விக்கெட்களை தகர்ப்பதன் மூலம் ஆட்டமிழக்க செய்யலாம்.ஆனால் இம்முறையிலான ஆட்டமிழப்பு வெற்றிகரமோ இல்லையோ அந்த பந்து செல்லுபடியற்றதாகவே அமையும்.


                                                                           அடுத்து ஒரு நாள் போட்டிகளில் உள்ள பவர்பிளே 20 பந்து பரிமாற்றங்களில முதல் பத்து பரிமாற்றங்களும் கட்டாயம் பவர்பிளேதான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அடுத்த துடுப்பெடுத்தாடும் அணிக்கான 5 பந்து பரிமாற்றங்களும்,களத்தடுப்பில் ஈடுபடும் அணி தெரிவு செய்யும் 5 பந்து பரிமாற்றங்களும் இனி இன்னிங்சின் 15வது பந்து பரிமாற்றத்தில் இருந்து 40வது பந்து பரிமாற்றகளுக்குள்தான் தெரிவு செய்யபடவேணும்.இவ்விதி 40 பந்துபரிமாற்றங்களுக்கு விட மேலும் குறைக்காத ஆட்டங்களுக்கே செல்லுபடியாகும்.

                                                                                                      அடுத்த விதியும் ஒரு நாள் ஆட்டங்களுக்கு மட்டும்தான் அதாவது ஒவ்வொரு இன்னிங்சின் போதும் இரு முனைகளிலும் இருந்தும் ஒவ்வோர் புதிய பந்து பயன்படுத்தபடும். ஆட்டத்தின் 34 பந்து பரிமாற்றங்களுக்கு பிறகு இனி பந்து மாற்றபடமாட்டாது.

                                                                                                                        அடுத்த விதியும் ஒரு நாள் ஆட்டங்களுக்குதான் அதாவது ஒரு அணி துடுப்பெடுத்தாடி அடுத்த அணி துடுப்பெடுத்தாடுவதற்கான குறைந்த நேரம் 20இல் இருந்து 30தாக அதிகரிக்கபட்டுள்ளது. இவ்விதி தடைப்படாத ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

                                                           அடுத்த விதி டெஸ்ட் போட்டிகளுக்கானது அதாவது மதிய நேர இடைவேளையின் பொது துடுப்பெடுத்தாடும் அணி 9 விக்கெட்களை இழந்திருந்தால் மதிய நேர இடைவேளையை அதிகபட்சமாக 30 நிமிடங்கள் தாமதபடுத்தலாம். முன்னர் இவ்வாறு தேநீர் இடைவேளையின் போது மட்டுமே இருந்தது.

                                                        அடுத்த விதியும் டெஸ்ட் போட்டிகளுக்கானதுதான்  யாதெனில் டெஸ்ட் ஆட்டங்களில் இரண்டாவது,மூன்றாவது ஷெசன்களை விளையாடும் அணிகளின் கப்டன் நடுவர்களை கேட்டு கொண்டால் கள நடுவர் நிச்சயமாக ஒரு முடிவு பெறப்படும் என நினைத்தால் மட்டுமே 15 நிமிடங்கள்(அதிகபட்சம் 4 பந்து பரிமாற்றங்கள்) வழங்க முடியும்.இப்படியான சந்தர்ப்பம் வழங்கபட்டால் நிச்சயமாக அந்த ஷேசன் முற்றிலும் விளையாடி முடிக்க வேண்டும்.போட்டியை முடிக்கும் நிலை குறிப்பிட்ட ஷேசனுக்கு இறுதி நிலைக்கு முன்னதாக இருந்தால் கூட கட்டாயம் அந்த ஷேசன் நிறைவு செய்யபடவேணும்.மேற்படி வழங்கப்பட்ட  மேலதிக நேரம் அன்றைய நாளுக்குரிய நேரத்தில் இருந்து கழிக்கபடும்.

                                                                                               மேற்கூறிய விதிகளே இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.இந்த விதிமாற்றம் பற்றிய உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் நண்பர்களே.                               

Saturday, September 24, 2011

ஆஸியின் இலங்கை சுற்று பயணம்

அவுஸ்திரேலியா அணி இலங்கை வரும்போது ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருந்தது. அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்களுக்கு இதுதான் முதல் தொடர்,கிளார்க்கின் முதலாவது முழு நேர தலைவராக செயற்படும் தொடர்,டெஸ்ட் அணியில் அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் இப்படி பல நெருக்கடிகளுடனேயே இலங்கை வந்திறங்கியது. 



முதல் ஆரம்பமானது T20 தொடர் அவுஸ்திரேலிய அணியில் ஒயிட்,வார்னர்,ஓ கெவி. போன்றோர் T20 அணிக்கு மட்டும்  தேர்வு செய்யபட்டிருந்தனர். எனவே அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அதிலும் தொடர்ந்து மோசமான போர்மில் இருக்கும் ஒயிட்க்கு கிட்ட தட்ட வாழ்வா.சாவா தொடர் போன்றது. இரண்டு போட்டிகளும் பள்ளேகல மைதானத்தில் நடைபெற்றது.முதல் போட்டியில் டில்ஷானின் அதிரடி சதத்தின் மூலம் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலமும் 35 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றது.இதில் ஆஸி அணியின் கப்டன் எடுத்த சில முடிவுகள் மிக மோசமாக இருந்தன. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் சிக்கனமாக பந்து வீசிக்கொண்டு இருந்தார்கள்.ஆனால் அவர்களின் கோட்டாவை பூர்த்தி செய்யாமல் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தார்.வார்னர் மட்டுமே 51 ஓட்டங்கள் எடுத்தார், மீதி அணியே  சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறிஇருந்தது.இரண்டாவது போட்டியில்  மஹேலவின் 84 ஓட்டங்களும் மாய  சுழற்பந்து வீச்சாளர் மெண்டிசின் 6 விக்கெட் சேர்த்து 8 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றது.இறுதியில் ஒயிட் தனித்து நின்று போராடியும்(அணையிற விளக்கு இறுதி தருணத்தில் பிரகாசமாக எரியுமாம்) ஏலாமல் போய் விட்டது.அடுத்த உலகக்கிண்ணT20 கோப்பை இலங்கையில் நடைபெற இருப்பதால் ஆஸி  சுழற்பந்து வீச்சுக்கு கட்டாயம் தயார்படுத்தியே ஆகவேண்டும்.







அடுத்து ஒருநாள் தொடர் ஆரம்பித்தது, ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடைக்கு பிறகு தரங்க களம் கண்டிருந்தார்.முதலாவது போட்டியில் ஜோன்சனின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது.ஜோன்சன் 6 விக்கெட்டுகளை கைபற்றினார்.பின்பு துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி வாட்சன்,பொன்டிங்,கிளார்க் ஆகியோரின் அரைச்சதங்களின் துணையுடன் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டியும் முதலாவதை ரிப்ளை செய்தது போன்று இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 208 ஓட்டங்கள் எடுத்தது. சங்கக்கார மட்டும் அரைச்சதம் பெற்றார். பின்பு வழமை போல வாட்சன்,பொன்டிங்,கிளார்க்  பிரகாசிக்க 8 விக்கெட்களால் ஆஸி வெற்றி பெற்றது. பொன்டிங் 90 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் பெற்றார்.மூன்றாவது போட்டியில் இலங்கைக்கு முக்கியமான தொடரை நிர்ணயம் செய்யும் போட்டியில் இலங்கை அணி தரங்காவின் சதத்தின் உதவியுடன் 286 என்ற ஓட்டத்தை பெற்றது.பின் மலிங்காவின் 5 விக்கெட் பெறுதியுடன் ஆஸியை 208 ஓட்டங்களுக்குள் சுருட்டியது. 



நான்காவது போட்டியில் மறுபடியும் லீ,டோர்ட்டி தலா நான்கு விக்கெட்களை கைப்பற்ற இலங்கை 132 ஓட்டங்களுக்கு சுருண்டது.ஆஸி மார்ஷின்  70 ஓட்டங்களின் உதவியுடன் 4 விக்கட்களால் வெற்றி பெற்று தொடரை வென்றது. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னா  ஒரு ஓவரில் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.ஐய்ந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 211 ஓட்டங்களே பெற்றது. இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சாமர சில்வா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அரைச்சதத்தை பெற்று வெற்றியை உறுதி செய்திருந்தார். ஆஸியில் அறிமுகமான இளம் வேகப்பந்துவீச்சாளர் பட்டின்சன் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.தொடர் நாயகனாக கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.





அடுத்து டெஸ்ட் தொடர் காலியில் ஆரம்பித்தது. ஆஸி அணியில் இரு அறிமுகங்கள் லயோன்,கோப்லண்ட் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி மிஸ்டர் கிரிக்கெட்இன் 95 ஓட்டங்களின் உதவியுடன் 273 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்த இலங்கை 105 ஓட்டங்களுக்குள் சுருண்டது.அறிமுக வீரர் லயோன் 5 விக்கெட் கைப்பற்றினார்.இரண்டாவது இன்னிங்க்காக துடுபெடுத்தாடிய ஆஸி 210 ஓட்டங்களை பெற்றது. ஹேரத் 5 விக்கெட் கைப்பற்றினார்.வெற்றி இலக்காக 379 ஓட்டங்களை கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை மஹேலவின் சதமும்,மத்தியுசின் 95 ஓட்டங்கள் பெற்றும் மற்றவர்கள் சோபிக்காததால் 125 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.ஹாரிஸ் 5 விக்கெட்களை கைபற்றினார்.ஆட்டநாயகனாக ஹசே தெரிவுசெய்யபட்டார்.



இரண்டாவது போட்டியில் முதல் துடுப்பெடுத்தாடிய இலங்கை 174 ஓட்டங்களுக்கு சுருண்டது.மத்தியுஸ் 58 ஓட்டங்களும் சங்கக்காகர  48 ஓட்டங்களும் பெற்றனர்.தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆஸி 411 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என்றபோது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.அறிமுக வீரர் மார்ஷ்,ஹஸே சதம் பெற்றனர்.பிறகு துடுப்பெடுத்தாடிய இலங்கை 311 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என்றபோது ஆட்டம் டிரா ஆனது.இலங்கையின் முதல் நான்கு பேரும் அரைச்சதம் பெற்றிருந்தனர்.ஆட்டநாயகனாக மீண்டும் மிஸ்டர் கிரிக்கெட் தெரிவானார்.மூன்றாவது போட்டி எஸ்‌எஸ்‌சியில் செத்த ஆடுகளம் தெரிந்த முடிவுதான்.ஆனால் முதல் துடுப்பெடுத்தாடிய ஆஸி சில தவறான ஷாட் தெரிவால் விக்கெட்களை இழந்து 316 ஓட்டங்களை பெற்றது ஹசே சதம் பெற்றார்,மார்ஷ் 81 ஓட்டங்கள் பெற்றார்.அறிமுக பந்து வீச்சாளர் ஈரங்க 4 விக்கெட்கள் கைபற்றினார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 473 ஓட்டங்கள் குவித்தது. மத்தியுஸ் கன்னி சதம் பெற்றார்.சிடில் நான்கு விக்கட்களை கைபற்றினார்.மீண்டும் துடுபெடுத்தாடிய ஆஸி 488 ஓட்டங்கள் குவித்தது.ஹுஜஸ்,கிளார்க் சதம் பெற்றனர் ஹசே 93 ஓட்டங்கள் எடுத்தார். ஹேரத் 7 விக்கெட்கள் கைபற்றினார்.ஆட்டநாயகன்,தொடர்நாயகனாக மிஸ்டர் கிரிக்கெட் தெரிவு செய்யப்ட்டார்.



சறுக்கியவர்கள்
முக்கியமாக ஆஸி அணியின் ஜோன்சன் இடம் டெஸ்ட் அணியில் கேள்வி குறியாகியிருக்கிறது.இவர் தொடரின் எந்தவொரு போட்டியிலும் சாதிக்கவில்லை.அடுத்து முக்கியமானவர் ஹாடின் தொடர் முளுவதுமே சொதப்பி இருந்தார். பைன் உடற்றகுதி பெற்றால் இவரின் இடம் கேள்விக்குறியே? அடுத்து பொன்டிங் பெருதாக சாதிக்கவில்லை இவரின் இடத்துக்கு அணியில் பிரச்சினை இல்லாமல்விட்டாலும் இவரின் மூன்றாவது இடம் நிரந்தரமாகவே பறிபோகும் எனவே நினைக்கிறேன். மேலும் கொப்லண்ட் இவரின் இடமும் கேள்வி குறியே சிடில்,போல்லீங்கர்,ஹாரிஸ் மூவரும் உடற்றகுதி உடன் இருந்தால் மேலும் பட்டின்சனும் இருக்கிறார்.அடுத்து வாட்சன் சறுக்கி இருந்தார் இவர் துடுப்பாட்ட வரிசையில் கீழுறங்குவது நல்லது பந்துவீச்சு சுமை இருப்பதால்.மேலும் லயோன் முதல் போட்டியில் எடுத்த விக்கெட்களோடு சரி இவர் மேலும் தன்னை வழப்படுத்தி கொள்ளவேண்டும்.ஆஸி அணியின் ஒரு நாள் அணியில் டேவிட் ஹசே ஏன் இருக்கிறார் என்றும் புரியவில்லை. மேலும் இலங்கை அணியில் பிரசன்னா டெஸ்டில் சறுக்கியிருந்தார், அணிதலைவர் டில்ஷானும் இறுதி போட்டியிலேயே தனது பங்களிப்பை வழங்கிஇருந்தார்.மேலும் சமரவீர முதலிரண்டு போட்டிகளில் சறுக்கியமையால் மூன்றாவது போட்டியில் நீக்கபட்டு இருந்தார்.மேலும் பாக்கிஸ்தான் தொடருக்கும் தெரிவு செய்யபடவில்லை. எனவே இவரின் எதிர்காலம் கேள்விகுறியே.

சாதித்தவர்கள்
மிஸ்டர் கிரிக்கெட் என அழைக்கபடும் ஹசே தொடர் முளுதும் வெளுத்து வாங்கி இருந்தார். மேலும் அறிமுகத்தை மேற்கொண்ட மார்ஷ் சாதித்திருந்தார்.கிளார்க்கும் சராசரியாக ஓட்டங்களை பெற்றார் இறுதி போட்டியில் இவர் ஹசேஉடன் புரிந்த இணைபாட்டமே ஆஸியை காப்பாற்றியது.மேலும் இறுதி போட்டியில் சதமடித்ததன் மூலம் ஹூஜஸ் ஒரு மாதிரி தப்பி பிழைத்திருக்கிறார்.ஹேரத் தற்போதைய இலங்கை அணியின் முதல் தெரிவு சுழற்பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

Sunday, September 18, 2011

வந்தான் வென்றான்



கோ ஏற்படுத்திய தாக்கம். ஜீவாவின் வந்தான் வென்றான் உடனேயே பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இன்று அந்தியில்தான் நேரம் அமைந்தது. பாமன்கடை ஈரோஸ் திரையரங்கில் சென்று பார்த்தேன். அவர்கள் படம் ஆரம்பிக்க முன்னும்,இடைவேளையிலும் ஒளிபரப்பிய புகைத்தலுக்கு எதிரான விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது அகோன் நா நா பாடாலோடு சேர்த்து.



படம் இரு சகோதரர்கள்(அப்பா வேறு) கீரியும்,பாம்புமாக இருப்பதாக காண்பித்து ஆரம்பிக்கிறது.இருவரும் வளர்ந்து இளையவன் ஜீவா பெரியவன் ரமணா(நந்தா) ஆகின்றனர்.ரமணா மும்பையில் பெரிய ரௌடி.ஜீவா குத்துசண்டை வீரர் தேசியமட்ட தெரிவுக்கு சென்று கொண்டிருக்கும்போதும் அஞ்சனா(டாப்சி) தனது கட்டிட கலை நேர்முகத் தேர்வுக்கு சென்று கொண்டிருக்கும்போது ஒரு சிறு மோதலில் சந்தித்து கொள்கின்றனர். எல்லா காதலும் மோதலில்தானே ஆரம்பிக்கும் இங்கும் காதல் தொற்றி கொள்கிறது ஜீவா மனதில்.ஆனால் டாப்சி அப்பா சொல்லும் பையனே கட்டிபேன். தனது அப்பா ஒத்துகொண்டால் கட்டிக்கொள்வாதாக சொல்லுகிறார். ஆனால் அவர் மறுக்கிறார். பின் எதிர்பாராதவிதமாக அவரது தந்தை இறந்து விடுகிறார்.பின் டாப்சி ஜீவாவுக்கு கட்டிகொள்வதாக ஒத்துக்கொள்கிறார். ஆனால் தந்தையின் இறப்புக்கு காரணமானவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டுமே. அதட்கு காரணமானவன் வேறு யாருமல்ல ஜீவாவின் அண்ணனான ரமணாவே.இறுதியில் ஜீவா நடத்தும் போராட்டத்தில் ஜீவா வெற்றி பெற்றாரா? அண்ணனை காப்பாற்றினாரா? டாப்சியை கை பிடித்தாரா என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.








                                                                       ஜீவா நடித்திருக்கிறார், கோ நிறைய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. வெள்ளாவி பொண்ணு டாப்சி வெள்ளையாதான் இருக்கிறார். என்றாலும் நடிக்கிறேன் என்று சொல்லி ஏதோ செய்கிறார். சுத்தமாக நடிப்பே வரவில்லை.டாப்சிக்கு தமிழ் சொல்லி கொடுக்கும் மங்காத்தா ம  நடிகர் நடிப்பும் சொல்லி கொடுக்கலாமே பாடல் காட்சிகளில் ஓரளவு ஆட செய்கிறார்.என்னதான் இருந்தாலும் டாப்சியின் புன்னகை என் மனதை கொள்ளையடித்தது. வகுப்பு தோழி ஒருவரின் புன்னகயை மீண்டும் கொண்டு வருகிறது. சந்தானம் வழமை போலவே செய்திருக்கிறார். அதிக இடங்களில் வருகிறார்.ஆனால் சிறுத்தை படம் அளவுக்கு கொமெடி இல்லை. வேறு ரஹ்மான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். மேலும் மனோபாலா,நிழல்கள் ரவி வீணடிக்கபட்டிருக்கிறார்கள்.இயக்குனர் கண்ணன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.இசை தமன் சும்மா பின்னி எடுத்திருக்கிறார். இவரின் முதல் படமான ஈரத்தில் இருந்தே இவர் ரசிகன் நான். அஞ்சனா,காஞ்சனமாலா,அஞ்சோ,திறந்தேன் ஏற்கனவே அதிகம் கேட்கும் பாடல்களாக மாறிவிட்டது. அதிலும் காஞ்சனமாலா படமாக்கபட்ட விதம் நன்றாக உள்ளது. தமன் ஒரு பாடலின் இடையில் அசத்தலாக ட்ரம்ஸ் வாசித்து செல்கிறார்.மொத்தத்தில் படம் சுமார் ரகம்.இறுதியாக பார்த்த இரண்டு படமும்(மங்காத்தா,வந்தான் வென்றான்)  மும்பை கதைக்களம்.தமிழ்நாட்டில் கதை பற்றாக்குறையோ?

Wednesday, August 31, 2011

மங்காத்தா

நெடு நாள் காத்திருப்பு, பலத்த எதிர்பாப்பு என பல அழுத்தங்களுக்குள் நேற்று தான் மங்காத்தா வெளிவந்தது. முதல் காட்சி சவோய் திரையரங்கில் நேற்று இரவு 10.30 க்கு டிக்கெட் எடுத்தாச்சு.ரூமில் இருந்து வெளிக்கிட்டால் ஒரே மழை.(நல்லது நடக்கும்போது மழை பெய்யுமாம்). ஒரு மாதிரி திரையரங்க்குக்கு சென்றால் உள்ளே போவதுக்கு பெரும்பாடுபட்டு உள்ளே சென்றாகிவிட்டது.தலயின் 50வது படம் பெரும் எதிர்பார்ப்போடு  போய் அமர்ந்தோம். வழமை போல் விளம்பரங்களை போட்டு கடுப்பேத்தாமல் உடனேயே படத்தை போட்டார்கள்.


                                                                       ஆரம்பமே அதிரடியாக அறிமுகம் ஆனார் அஜீத் கம்பீரமான,மிடுக்கான நடை, சிறு தொப்பை விநாயக்காக கலக்கல் அறிமுகம்.அடுத்து ஆரம்ப எழுத்து காட்சிகளில் சிறப்பாக கிராபிக்ஸ்சை கையாண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாட்டு நாணயதாள்களிலும்.வழமையான வெங்கட்பிரபு டீம் பிரேம்ஜி,வைபவ்,மகத் மேலும் அர்ஜூன்,த்ரிஷா,அஞ்சலி,ஆன்ட்ரியா,லக்ஷ்மிராய் என நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியிருந்தது.ஆட்டம் தொடக்கத்தில் மெதுவாகவே ஆரம்பித்தது போக போகத்தான் சூடு பிடித்தது.ஆரம்பத்தில் ஒரு காட்சி ஒரு செய்தியை சொல்லி சென்றது கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்ததால்தான் அது பற்றி காவல்துறையோ,அரசாங்கமோ உடனே செயற்பட்டது. அது ஒரு Xஓ,Yஓ ஆக இருந்தால் அப்பிடியே கிடப்பில் போடப்பட்டிருக்கும். இது நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருக்கும் காரணமான ஒன்றை எனக்கு ஞாபகபடுத்திருக்கிறது. அர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டத்தை முறியடிக்க வருகிறார். அஜித்,த்ரிஷா காதல் அடுத்த பக்கத்தில் போகின்றது அதிலும் வாடாபின்லாடா பாடல் கிராபிக்ஸ் கலக்கல். மேலும் முதல் பாதியில் அஜித் பேசும் லைட்டை போட்டுட்டு வண்டி ஓடினா தப்பில்லை ஆனா லைட்டா போட்டுட்டு வண்டி ஒட்டவே கூடாது மேலும் த்ரிஷா சொன்னா பையன்கள் சும்மா இருந்தாலும் பொன்னுக விடமாடாங்களே போன்ற வசனங்கள் கலக்கல் மேலும் அஜித் தண்ணி அடித்து விட்டு கதைப்பது கலக்கல். மேலும் அஜித் சில இடங்களில்தான் ஆடினாலும் நடன அசைவுகள் ரசிக்க வைக்கிறார்.




Add caption




                                       இனித்தான் கதை கருவை நோக்கி நகருகிறது.பேட்டிங் பணமான 500 கோடியை அஜித்,பிரேம்ஜி,மகத்,வைபவ்,கணேஷ் சேர்ந்து கொள்ளையடிக்க போடும் அதிரடி திட்டம் கலக்கல். ஆனால் இந்த இடத்திலேயே Ocean 11 சில இடங்களில் நினைவு வருகிறது. இதில் வரும் பைக் ரேஸ் ரசிக்க வைக்கிறது.பிறகு பேட்டிங் பணம் 500 கோடியை கொள்ளையடித்து விடுகிறார்கள். பின் பங்கு பிரிக்கும் சண்டையில் நண்பர்களிடையே மோதல் இதிலேயே அஜித் நிஜமான வில்லனாக தெரிகிறார்.நடிப்பில் கலக்கிருக்கிறார். மீதி என்ன நடந்தது என்பதை திரையில் கண்டு கொள்ளுங்கள். இறுதி டிவிஸ்ட் எதிர்பார்க்காது.

                                                                                                                       
                                                                                                                   வெங்கட்பிரபுவின் திரைக்கதை,காட்சிகளை நகர்த்தி சென்ற விதம் கலக்கல் முன்னைய மூன்று பாடங்களையும் விட பின்னியிருக்கிறார்.பிரேம்ஜியும் கலக்கி இருக்கிறார். மேலும் பின்னணி இசைதான் படத்தின் பெரிய பலமே யுவன் வழமை போலவே கலக்கி இருக்கிருக்கிறார்.மேலும் ஒளிப்பதிவாழர் அனைவரையும் ஸ்டைலிஷாக காட்டி உள்ளார்.மேலும் உடை வடிவமைப்பாளர் வெங்கட்பிரபுவின் சகோதரி மேலும் அழாக காட்டியுள்ளார் அனைவரையும்.மொத்தத்தில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு மங்காத்தா கூறி செல்வது கையாள வேண்டிய விதத்தில் ஒவ்வொரு நடிகரையும் கையாண்டால் வெற்றிதான். மேலும் தமிழ் சினிமாவிலேயே ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்துக்கு இணையாக நடிக்கக்கூடியவர் அஜீத் ஒருவரே.

Friday, July 22, 2011

நானும் சைக்கிலும்



நான் சைக்கிள் ஓடத்தொடங்கியது மூன்றாம் ஆண்டில்தான். அப்போதுதான் திருமலையில் இருந்து ஊருக்கு மீண்டும் திரும்பியிருந்தேன்.நான் எனது அப்பாவுடன் சென்று தீருவில் விளையாட்டு மைதானத்திலும் அங்கு உதைபந்தாட்ட போட்டி நடக்கும்போது அருகிலிருந்த தூபியிலும் மைதானதுக்கு முன்பு இருந்த உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்த சைக்கிள் எடுத்து அப்பா முன்னுக்கு ஹாண்டிலில் பிடித்து பின்னாலும் பிடிக்க நான் உளக்கினேன். ஆரம்பத்தில் அடிக்கடி விழுந்து எழும்பினேன். சில தடவை முழங்காலில் காயம் ஏற்பட்டதும் உண்டு. ஒரு வார முடிவிக்கிடையில் அந்த சைக்கிள் ஓட பழகி விட்டேன்.
                           ஆனால் உடனே வீதியில் ஓட அனுமதி கிடைக்கவில்லா ஏனெனில் அந்த நேரத்தில் இராணுவ வாகானங்கள் ஓடும் மோட்டு ஓட்டம்தான். நேரிடையாகவே பார்த்த அனுபவங்கள் உண்டு.இரண்டு தடவை அந்த இடங்களிலேயே உயிரிளந்தார்கள். நேரடியா கண்டேன். மேலும் எனது மாமா என் வயதொத்த மச்சானை ஐஸ்கிரீம் வேணும்எண்டு கேட்டதால் பருதித்துறைக்கு ஏற்றிக்கொண்டு செல்லும்போது இராணுவ ட்ரக் பருதித்துறையில் மோதி உயிரிழந்தார். மேலும் நேரடி அனுபவம் நான் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் படித்ததால் பாடாசாலை முடிந்ததும் எமது ஊர்,கம்பர்மலை,வல்வெட்டி பொடியல் எல்லோரும் சேர்ந்தே வருவோம் அப்பிடி ஒருமுறை வரும்போது வல்வெட்டியில் நாங்க தண்ணீர்தாங்கியில் தண்ணீர் குடித்து விட்டு வெளியேறும்போது. வேகமா வந்த ஆமியின் பீல் பைக் வந்து அடித்தது எம்மோடு வந்த கரீஸ் அண்ணாவின் சைக்கிள்ளில் நல்ல காலம் மெதுவாக அப்பவே உழக்க தொடங்கியதால் அவருக்கு சிறு காயம்தான். சைக்கிள்தான் பாவம் பின் பக்க சில்லு வேறு எங்கேயோ கிடந்தது. இப்பிடி உடனே வீதியில் ஓட மறுத்ததும் சரியாகதான் பட்டது.
                    பின் கொஞ்ச காலம் பிறகு எதேச்சையாக ஒரு நாள் அம்மாவின் ஏசியா லேடீஸ் சைக்கிள் எடுத்து ஓடிப்பார்த்தேன் எந்த வித சிரமும் இருக்கவில்லை. அப்பிடியே கணபதி படிப்பகத்ததுக்கும்,பிள்ளையார் கோவிலுக்கும் சென்று விட்டேன்.இப்பிடி சில நாட்கள் போனதுண்டு. வீட்டில தெரியாது. ஒரு நாள் சந்தியில் உள்ள வாசிகசாலைக்கு செல்லுபோது வீட்டில் மாட்டிகொண்டேன் அதுவும் ஆர்மி ட்ரக் போகும்போது அதிகமானவர்கள் இறங்கியே நிற்பார்கள். ஆனால் எனக்கு எப்போதுமே நிற்க வேண்டும் என்று எண்ணம் மனதில் தோன்றியதில்லை. நாங்கள் கொன்வே(இராணுவ வாகன தொடரணி) செல்லும் போதே வீதியில் ஆமி அடுத்த பக்கம் மிலாந்தும் போது ரோட்டைக் கடந்து ஓடியவர்களாச்சே. அன்று வீட்டில் சாம்பார்தான். ஆனாலும் பொடியன் வடிவா சைக்கிள் ஒடுறான் எண்டு நம்பிக்கை ஏற்பட்டதால் பாடசாலைக்கு அம்மாவின் லேடீஸ் சைக்கிளில் செல்லும் வாய்ப்பு கிட்டியது.வேணுமென்றே பஸ்சை தவறவிட்டு சைக்கிள்ளில் செல்வது வீட்டில் புரிந்து விட்டது. அன்றிலிருந்து எனது கால்களுக்கு ஓய்வில்லை. பின் ஒரு நாள் அப்பாவின் ரலி சைக்கிள் எடுத்து ஓடினேன் ஒரு சிரமும் இருக்கவில்லை. இதை பார்த்த அப்பப்பா 5ஆம் ஆண்டு ஸ்காலர்ஷிப் பரீட்சையில் சித்தியடைந்தால் பெரிய சைக்கிள் வாங்கி தருவதாக சொன்னார். இதுதான் பெரும்பாலும் பொடியளை படிக்க வைக்க மருந்து. நானும் பரீட்சையில் சித்தியடைந்தேன். அடுத்த கிழமையே புத்தம் புதிய ஹீரோ சைக்கிள் அப்பப்பா வாங்கி தந்தார்.அன்று முதல் இன்று வரை பயணிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம்.இடைஇடையே எனது சாகசத்தினால் சைக்கிள் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தது. ஆனால் ஒரு நாளும் என்னை அனுப்பியதில்லை. அப்பிடி ஏதும் காயம் வந்தாலும் அப்பப்பாவின் வெட்டோட்டி,குப்பைமேனியுடன் சரியாகி விடும்.
                                                             4ஆம்.5ஆம் ஆண்டுகளில் போட்டிகளுக்கு கோட்டம்,வலயம் என்று நெல்லியடி,பருத்தித்துறை செல்லும் போது அப்பாவுடனேயே செல்ல வேண்டும் இல்லாவிடில் அண்ணாமாருடன் செல்ல வேண்டும். 6ஆம் வகுப்புக்கு வந்தவுடன் போட்டிகளுக்கு போகும்போது எல்லா மானவர்களும் சேர்ந்துதான் போவம் முன்னால் இரண்டு அண்ணாமார் செல்லுவினம் பின்னால் நாங்கள் எங்களுக்கு பின்னால் மற்ற அண்ணாமார்,இறுதியில் ஆசிரியர்கள் வருவினம்.அதெல்லாம் சொல்ல முடியாது சந்தோஷங்கள். வழமையாகவே நான் வேகமாகவே சைக்கிள் ஓடுவேன். என்னோடு சேர்ந்து எல்லா நண்பர்களும் அப்பிடித்தான். போட்டியென்றால் எல்லா பாடசாலைக்கும்தானே நாங்கள் பொடியள். சகோதர பாடசாலை பெட்டையள். அப்ப கொஞ்சம் எங்கள விட வெள்ளனை வெளுக்கிடுவீனம். ஆனாலும் இறுதியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முதல் போவது நாங்கள்தான் இடையில் நாங்க ரேஸில் போய் முந்தி விடுவோம். ஆனாலும் எங்கட வகுப்பு பெட்டையளில்  சில பேர் நிஜத்திலேயே ஓடுற பெட்டையள் இஞ்சையும் எங்களுக்கு ஓட்டம் காட்ட வெளிக்கிவிடுவீனம். ஆனால் நாங்கள்தானே சைக்கிள் ரேஸில புலி ஆச்சே எங்கள்ட ஒண்டும் செய்யலாது. அப்பிடி வந்தாலும் எங்கட சைக்கிள்கள் ரோட் முளுவதும் கவர் பண்ணி அங்கும் இங்கும் ஓடும் முந்த வெள்ளிக்கிட்டால் அப்பிடியே வயலுக்குள் போக வேண்டியதுதான். நாங்கள் சைக்கிள் ஒடுறதில PHD முடிச்சவங்கள் ஆச்சே.பிறகு போட்டி முடிஞ்சு பிறகு அப்பிடியே நெல்லியடிக்கு சென்று ஐஸ் கிரீம் குடுச்சுட்டுதானே வருவம்.ஒரு முறை சோகக்கதை நாங்க எல்லாம் ஐஸ் கிரீம் குடிக்க சைக்கிள் வாசலில் விட்டுட்டு போக திரும்பி வர வகுப்பு நண்பன் சர்மிலனின் சைக்கிள்ளை யாரோ ஆட்டயை போட்டுடானுகள் பாவிகள். அன்றிலிருந்து அனைவரும் சைக்கிள்ளை பார்த்து பார்த்துதான் ஐஸ் கிரீம் குடிப்பம். இப்பிடி நாங்கள் ஐஸ் கிரீம் குடிச்சுட்டு அங்க இங்க சுத்தக்கிடயில சகோதர பாடசாலை வெளிக்கிட்டு ஆனால் நாங்கள்தான் யார் குறுக்கு பாதையால் விட்டு மோட்டு ஓட்டம் ஓடி முன்னுக்கு வந்திருவம்.

                                                     ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தால் வந்து மெயின் ரோட்டில ஏறுவோம்.அந்த புது புது பாதை கண்டுபிடிப்பதுக்கு பெயர் போனது நான்,சஜீவன்,கஜன் போற போக்கில் சைக்கிள்ளை விடுவோம் சில நேரம் அது குறுக்கு பாதையாக இருக்கும் சில நேரம் சுத்து சுத்து எண்டு சுற்றுவோம். ஒரு நாள் நான் எனக்கு தெரியும் எண்டு ஒரு பாதையால் விட்டு பிறகு வயல்,பனங்காணி எல்லாம் போய்தான் மெயின் ரோடுக்கு வந்து ஏறினோம். ஆனால் ஒவ்வொன்றும் அனுபவம்தானே நாங்கள் மூவரும் கண்டு பிடித்த பாதைகள் எமக்கு பிற்காலங்களில் நிறைய உதவின. கொன்வே நேரத்தில் செல்வதுக்கும் மேலும் அந்த காலங்களில் அங்கு அங்கு கிரனேட் எறியப்படும்,கிளைமோர் வைக்கப்படும் அப்போதெல்லாம் இந்த பாதைகள்தான் பெரிதும் உதவின. நாங்கள் மூவரும்தான் பெரிய தலைகள் போல அனைவரையும் அழைத்து செல்வோம் பெண் அணியினரையும் சேர்த்துதான் மனிதாபின எண்ணம்தான் சகோதரங்கள் ரவுண்டஅப்பில மாட்டு படக்கூடாது எண்ட நல்ல எண்ணம்தான் ஆரம்பத்தில் சில வீர பெண்மணிகள் முன்னுக்கு சென்று அனுபவபட்டு பிறகு எங்களுடனே வந்தார்கள்.போட்டிக்கு போகும்போது சகோதரப்பாடசாலயை முந்தி செல்லும்போது சேக்கஸ் காட்டி விழுந்த வரலாறுகள் உண்டு (நான் இல்லைப்பா)
                                                             இப்பிடியே காலங்கள் உருண்டோடின. உயர்தரம் வந்தது உயர்தரத்தில் எங்கள் பாடசாலையில் பெட்டையலும் உண்டு. ஏன் வாறாலுகளோ தெரியல? பக்கத்தில சகோர பாடசாலை இருந்தும் இங்கதான் அள்ளு கொள்ளையா வந்து சேருவினம் அதுவும் வட இந்து மத்திய மகளிர் கல்லூரி,மெதடிஸ் என்றெல்லாம் வந்து சேர்ந்தவையுண்டா பாருங்கோவன்(நான் நினைக்கிறேன் எங்களை ஒவ்வொரு நாளும் பார்க்க போல). இப்பவும் சைக்கிள் மேலதிக சேவை உயர்தர கணித வகுப்புக்கள் நெல்லியடியிலேயே அமைந்திருந்தன. பிறகென்ன ஒவ்வொரு நாளும் பயணம்தான். ஆரம்பத்தில் நிறைய பொடியள்,பெட்டையள் 22 பேர் என நினைக்கிறேன். எங்கட ஊரில் இருந்து மட்டும் அப்ப எனது வீட்டுக்கு முன்னால் உள்ள வேம்பின் கீழ் கூடி எல்லோரும் சேர்ந்தே செல்வோம். கல்லு ரோட்டாலேயே செல்வோம் இங்கும் பெண் அணி படிப்பு ஆர்வத்தில முன்னுக்கு போகிறதேண்டா நீங்க நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. எங்க தம்புராஜா சேர்ட்ட வகுப்பில போய் இருந்தா கொம்பாஸ் எறியில இருந்து தப்பலாம் எண்டுதான். இதில் எண்ட உயிர் தோழிக்கு தெரியும் எங்க இருந்தால் எறி விழாது  எண்டு.ஆளோ என் நெஞ்சளவு கூட வராது ஆதலால் சைக்கிள் சீட் எட்டாதுதானே எனவே பாய்ஞ்சு பாய்ஞ்சு ஓடி வந்து பாதுகாப்பான இடம் பிடிக்க பிந்தி விடுவும் பாவம் அடிக்கடி மாட்டுபவர்களிலில் ஒராள்.  மேலும் மற்ற வகுப்பிலையும் கடைசி வாங்கில இடம்பிடிக்கதான்.பின் வகுப்பு முடிந்து வீட்டை வரும்போது ரோட்டை வாடகைக்கு எடுத்து விடுவோம் தேமா மரத்தின் கீழ் ஆரம்பிக்குக் கதை வீட்டு வாசல் வரை தொடரும். இங்கும் பெட்டயல் முன்னால போவீனம் ஆனால் முதல்ல ஊர் போய் சேருவது நாங்கள்தான் எங்களுக்கு முன்னால்தான் சென்று கொண்டிருப்பார்கள் பாதுகாப்பு நாங்கள்தானே. ஆனால் திடீர் என்று காணாமல் போய் குறிப்பிட்ட நேரத்தின் பின் அவர்களுக்கு முன் வருவோம் அதுவும் அவர்களுக்கு பின்னால் வந்திட்டு வேறு பாதைக்கு போய் அவர்கள் எங்களுக்கு முன்னுக்கு வந்துவிடக்கூடாது என்பதட்க்காக குறுக்கு பாதையால் நாங்கள் என்ன வேகத்தில் ஓடுவோம் என்று கணிக்க முடியாது.

                                     இப்பிடி மகிழ்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை ஏனெனில் பாடசாலை தொடங்க அதிகமானோர் வர்த்தகதுக்கு மாறிவிட்டனர். பின் மூன்று பொடியள்,மூன்று பெட்டையல் தான் கல்ரோட் பாதையால் போய் வந்தோம். அதுவும் பாடசாலயில் மாணவர் தலைவர்கள் ஆனதால் பிந்தியே வருவோம் எனவே சேர்ந்து போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.பிறகு நான் போகும்போது கல்ரோட் பாதையால் போவேன். வரும்போது உடுப்பிட்டி பாதை அது நிறைய பொடியள்,பெட்டையல் போறது எல்லாம் என்னுடைய நண்பர்கள் அந்த பாதையில் நாங்கள் செய்த குறும்புகள் மறக்க முடியாதது. அதுவும் எங்களுக்கு குத்தகைக்கு எடுத்தாச்சு இங்க பெட்டையல் முன்னால் போவீனம் நாங்கள் பின்னுக்கு சில வேளை முன்னுக்கு போவோம்.குறைந்தது இரண்டு பேராவது சமாந்தரமாகவே செல்வோம் தனியா சென்றதாக வரலாறே இல்லை.பெட்டையல் ஒண்டும் லேசு பட்டவை இல்ல அவையலும் ரெண்டு மூன்றாதான் போவீனம். அடிக்கடி நாங்கள் எங்களுக்குள் கதைப்பது போல அவர்களை கலாய்ப்பது உண்டு. சில தேவை இல்லாத சில பேர் மரத்துக்கு எல்லாம் ஏதோ சொல்லுவினம். நாங்கள் கணக்கெடுப்பது இல்லை. இந்த பாதையில் சில காதல்களும் பயணிப்பது உண்டு. எனவே நாங்கள் வீடு போய் சேர வரைக்கும் அறுப்பதுக்கு ஏதோ கிடைத்து விடும். ஆனாலும் சொல்லி வேலை இல்லை  உயிர் தோழியின் திறமை ஒரு நாள் நானும் எனது நண்பனும் வந்துகொண்டு இருந்தோம். வகுப்பு தோழி ஒருவரின் செயின் கழன்று விட்டது. உடனே எங்கள் பட்டாளம் பெரிய பிளான் போட்டது அந்த செயின்னை பூட்டி கொடுக்க சில பேர் சைக்கிளை தந்து விட்டு போனார்கள். அதுக்குள் தோழி உடனே களத்தில் இறங்கி அனைத்து விடயத்தையும் முடித்து விட்டாள். அன்று உதவி செய்ய போய் மூக்குடை பட்டு போனார்கள்.இப்பிடியாக உயர்தரத்தில் ஒரு நாள் இரசாயான வகுப்பு நடக்கவில்லை பயங்கர மழை உடனே எங்கள் படையணி வெள்ள பகுதிகளில் செல்ல திட்டமிட்டு கல்லுவம் சென்று பின் அடுத்து வல்லை ரோட்டுக்கும் போனோம். அதில் அதே இரசாயன ஆசிரியர் வர மாட்டுபட்டது வேற கதை. ஆனால் அன்றைய நாள் போல ஒரு மழை நாளும் மகிழ்ச்சியாக அமையவில்லை. வாய்க்காலுக்குள் சைக்கிள் புதையுண்டு தூக்கி சென்று.மறக்க முடியாது அந்த நாள். அது தொடர்பான படங்களை இணைதிருக்கிறேன்.
                     இப்பிடி பல மகிழிச்சியான தருணங்களில் இணைந்திருதாலும். சில பல விபத்துக்களை சந்திதிருக்கிறது சைக்கிள். எனது சைக்கிள் பலம் பொருந்தியாதல் சிறு காயங்களையே சந்த்திதுளது ஆனால் ஒரு முறை நானும் எனது கஜனும் மிக விரைவாக சென்றபோது எனது பெடல் கட்டை அவன் முன் சில்லுக்குள் சிக்கி அவன் ஒரு சுவர் அளவு தூரதுக்கு தூக்கி எறியப்பட்டான். தெய்வாதீனமாக ஒரு காயமும் இல்லை. ஆனால் 22 கம்பிகள் மாற்ற வேண்டி இருந்தது. இப்பிடி இதே சம்பவம் மூன்று நான்கு தடவை எங்களுக்கு நடந்துள்ளது. வேறொரு முறை எனது நண்பன் சஜீவன்,திப்ஷன்னா கொளுவீ கொண்டபோது 48 கம்பிகள் இருவருக்கும் மாற்ற வேண்டி இருந்தது. மேலும் வாகனம் வரும் நேரங்களில் இறுதி கணத்தில்தான் வழி விடுவோம் நாங்கள் அனுபவம் சமாளித்து விடுவோம். சில நண்பர்கள் திணறுவார்கள் வகுப்பு விட்டு வரும்போது விலுந்த வரலாறுகள் உண்டு.  
                                    









                                     இறுதியாக நாங்கள் உயர்தரப்பரிட்சை முடிந்த அடுத்த நாள் காலை 6 மணிக்கே எல்லோரும் சைக்கிளிலில் வெளிக்கிட்டோம். அன்று முளுதும் உலாத்துவது என்று பிளான் கால் உழக்கிற போக்கில் போவதுதான் என்ற பிளான் படியே வெளிக்கிட்டு மண்டான் பிரதேசம் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடம் எல்லாம் சென்று மத்தியானம் பசிக்க வெளிக்கிட்டதால் புத்தூர் அருகே வல்லை வீதியில் வந்து எறினோம் அப்பிடியே வரும் வழியில் செல்வச்சன்னதி சென்று ஆத்தில் குளித்து விட்டு பிறகு அப்பிடியே மண்டபக்கிடங்கு சென்று விட்டு வீடு வந்து சென்றோம். அந்த நாள் இன்னும் மனத்திரைகளில் அதன் பிறகு நான் மேல்படிப்புக்காக கொழும்பு வந்து விட்டேன் எல்லாரும் ஒவ்வொரு திசையில் சென்று விட்டார்கள்.சைக்கிள் வீட்டே அமைதியாக நிட்கிறது. இந்த பயண படங்களையும் இணைதிருக்கிறேன். இந்த வருட இறுதியில் நெடுந்தூர பயணம் திட்டமிட்டிருக்கோம். அதனுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

Saturday, July 9, 2011

தென் சூடான்

இன்று ஆபிரிக்க கண்டத்தில் 54வது நாடாக உதயமாகிறது.இன்று தலைநகர் ஜீபாவில் நடக்கும் கொண்டாட்டங்களில் பான் கீ மூன், சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் மேலும் பல உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர். எமது சார்பாகவும் கொண்டாட்டங்களில் பங்கு பற்ற அழைக்கபட்டதாக சில ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஆனால் உறுதிப்படுத்தி கொள்ள முடியவில்லை.
                                   ஆனால் இந்நாட்டு மக்கள் இலகுவாக சுதந்திரத்தை பெறவில்லை 22 வருடபோராட்டம், மேலும் 1.5 மில்லியன் உயிர்களை இதற்கு விலையாக செலுத்தி இருக்கின்றனர். 2005ம் ஆண்டில் புஷ் ஆட்சியில் அமெரிக்காவின் தலையீட்டின் கீழ் எட்டப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் தென் சூடான் இதுவரை தனியாக இயங்கி வந்தது.பின் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற தேர்தலில் 99 சதவீத மக்கள் பிரிந்து செல்ல வாக்களித்ததால் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரும் சம்மதித்தார்/சம்மதிக்க வைக்கபட்டார்.என்னதான் சுதந்திரம் பெற்றாலும் அமெரிக்காவின் பொம்மையாகவே இருக்கும் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த கூடாது என அமெரிக்கா மூக்கை நுளைத்தாலும் அமெரிக்கா தூர நோக்கோடுதான் களம் இறங்கி இருக்கிறது. வேற என்ன எண்ணை வளம்தான். நாட்டின் தென் பகுதியில்தான் எண்ணை வளம் அதிகமாக இருக்கிறது.

                                                                                                                                               ஆனாலும் ஏதோ நாடு கடந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வளங்குதோ என்னமோ இங்கதான் முதல் தூதரகம் எண்டு ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன். நாட்டின் மொத்த சனத்தொகை 7.5-9.7 மில்லியன்.  நாட்டின் ஏற்றுமதியாக எண்ணை வளம் உள்ளபோதும். உலகில் உள்ள அபிவிருத்தி அடையாத நாடுகளில் இதுவும் ஒன்றாகும். நாட்டில் உள்ள சிறுவர்களில் 7 பேருக்கு ஒருவர் 5 வயதுக்கு முன்னே இறக்கின்றனர். நாட்டின் பரப்பளவு 619,745 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். பேசப்படும் மொழிகள் ஆங்கிலம்,அரபிக்,ஜீபா அரபிக்,டின்கா.




                                முதலாவது ஜனதிபதியாக இருக்கும் Salva Kiir Mayardit பல சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறார். சூடானுடன் எல்லை பிரச்சினை, எண்ணை வளம் போன்றவற்றை பகிர்வதில் உள்ள சிக்கல்,நாட்டில் உள்ள 7 போராட்டக்குழுகள், மேலும் நாட்டின் வருமானம் சமமாக பகிரப்படவேண்டும்,கல்வியறிவு மிகவும் அடி மட்டத்தில் உள்ளது. மேலும் சுகாதார வசதிகள் பிற உட் கட்டமைப்பு வசதிகள் எல்லாம் அடி மட்டத்திலிலேயே உள்ளன. எனவே மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. 193 நாடாக ஐநா சபையில் பதிவாகிறது. 194வது நாடு எப்ப வரும்?????????????

Tuesday, June 21, 2011

எனது பார்வையில் இங்கிலாந்து இலங்கை ரெஸ்ட் தொடர்




முதலாவது ரெஸ்ட் காத்ரீப்பில் மே 26ம் தேதி ஆரம்பித்தது. புதிய கப்டன்,அனுபவமற்ற பந்து வீச்சு கூட்டணி,முரளி இல்லாமல் முதலாவது வெளிநாட்டு தொடர் என்று பல கேள்விகணைகளுக்கு தமது ஆட்டதின் மூலமாக பதிலுரைக்கும் முகமாக இலங்கை அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி ரெஸ்ட் போட்டி தரவரிசை பட்டியலில் முன்னேறும் முகத்துக்கு அடித்தளமிட வேண்டியநிலையிலும் களமிறங்கியது. முதல் நாளே சகுனம் சரியில்லை மழை காரணமாக ஆட்டம் தாமத்திதேஆரம்பித்தது.தொடரில் ஓரிரு நாட்களே ஆட்டம் நேரத்துக்கு ஆரம்பித்தது. டில்ஷான் தனது முதல் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இந்த தொடரில் இலங்கைக்கு + ஆக பார்த்த விடயங்களில் இலங்கையின் ஆரம்பஇணைபாட்டமும் ஒன்று அதில் டில்ஷான்,பரணவிதான,திரிமான நம்பிக்கை அளிக்க கூடிய விதத்திலேயே செயற்பட்டிருந்தனர். இலங்கை அபராமகவே துடுப்பெடுத்தாடி 400 ஓடங்களை பெற்றது. வழமை போல் சங்கா இங்கிலாந்து மண்ணில் சறுக்கிருந்தார். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளயாடிய மஹேல கூட சறுக்கி இருந்தார். ஆனால் இத்தொடரில் இலங்கை பெருமைபட கூடிய விடயமாக பிரஸன்னா ஜயவார்டனே 6ம் இலக்க துடுபாட்ட வீரராக சிறப்பாகவே பிரகாசித்திருந்தார். சமரவீரவும் தன் பங்குக்கு ஓட்டங்களை குவித்தார்.பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பாக ஆண்டர்சன்,ஸ்வான் தலா 3 விக்கெட் கைபற்றினர். பின் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 496 ஓடங்களை குவித்தது. டிரோட் 203,குக் 133,பெல் 103 இலங்கை அணி தொடர் முழுவதும் பந்து வீச்சில் சொதப்பியது.



ஆனால்இலங்கை அணியின் பந்து வீச்சு உத்தி வியப்பழிப்பதாக இருந்தது லக்மால்,வெலகெடேற ஆகியோர் மிகச்சிறப்பாக பந்து வீசி விக்கெட் கைப்பற்றுவர் பிறகு அதே உத்வேகத்தில் பந்து வீசாமல் அடுத்து வரும் துடுப்பெடுதாட்ட வீரருக்கு அவுட்ஸைட் ஆஃப் ஸ்டூம்ப் வீசி இலகுவாக ரன் எடுக்க வாய்ப்பு வழங்குகிறார்கள். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய இலங்கை அண்ணி வெறும் 25 ஒவ்ர்களில் 82 ஓட்டங்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை தளுவியது. டிரெம்லெட்,ஸ்வான் அபாரமாக பந்து வீசி நான்கு இலக்குகளை தகர்த்தனர்.






அடுத்த ரெஸ்ட் லோர்ட்சில் மழை தன்பங்குக்கு விளையாட டில்ஷான் அபராமக துடுப்பெடுதாடி 193(அதிகூடிய தனி நபர் ஓட்டம் இலங்கை சார்பாக லோர்ட்சில்) ஓட்டங்களை குவிக்கவும். இக் காலகட்ட ரன் மெஷின் என சொல்லபடக் கூடியவருமான குக் ஓடங்களை குவிக்க சமநிலையில் முடிந்தது.







அடுத்த ரெஸ்ட் போட்டி சங்காவின் அருமையான துடுப்பாட்டம் மூலமா சமநிலை ஆகியது. அனுதினன் அண்ணா கூறியது போன்று தலமை பதவி வந்தா எல்லாரும் போர்முக்கு திரும்புவாங்கள் போல. அநேகமாக இதுதான் சங்காவின் கடைசி ரெஸ்ட் போட்டி என நினைக்கிறேன் இங்கிலாந்து மண்ணில் மனிதர் சாதித்து காட்டியுள்ளார். தொடர் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து சார்பில் திரேம்லேட்டும் இலங்கை சார்பில் பிரஸன்னா ஜயவார்டனேவும் தெரிவு செய்யப்பட்ட்னர்.தொடரில் அதி கூடிய ஓட்டங்களை குக்(390),பெல்(331),திரொட்(267),டில்ஷான்(253),பிரஸன்னா ஜயவார்டனேவும்(216) குவித்துளனர்.அதி கூடிய விக்கெட் திரேம்லேட்(15),ஸ்வான்(12),பிராட்(8),ஆண்டேர்சன்(7),வெலகெதர(7),லக்மல்(7)

இத் தொடரின் இறுதியில் இலங்கைக்கு சாதகமானது என நான் கருதிய விடயங்கள் மத்திய தரவரிசையில் 6ம்இடம்,5ம் இடம் எந்த மண்ணிலும் சாதிப்பார்கள் போலுள்ளது.மேலும் எதிர்காலத்துக்கு சிறந்த ஒரு தொடக்க வீரர் கிடைத்துள்ளார் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும்போது புரிந்தது. கவலைக்குரியது டில்கார இன்னும் அணியில் இருப்பது,மக்ரூப் ஏன் அணியில் உள்வாங்கப்பட்டார் என்பது.மேலும் சுழற் பந்தவீச்சாளர்களை பயன்படுத்திய விதம்.திசார பெரேராவும் அணியில் இருப்பது கேள்விக்குரிய விடயம் மத்யூஸ் வந்து சரியாக இடத்தை நிரப்புவார் என நினைக்கிறேன்.




அதே போன்று இங்கிலாந்து அணியிலுள்ள பலவீனம் இடது கை வேகப்பந்து வீசாளர்களை ஸ்டிராஸ் எப்படி சாமாளிக்க போகின்றார்? மேலும் பிராட்இன் இடம் ரெஸ்ட் போட்டியில் கேள்வி குறியாக இருக்கிறது ஃபின் தொடர்ச்சியாக சிறப்பாகவே செயட்படுகிறார். ஷஷாட் உள்ளூர் போட்டிகளில் சறுக்கி இருக்கிறாரார்.பிராட் இன் நேரடி போட்டியாளர் பிரெஸென் கதவுகளை தட்டி கொண்டு இருக்கிறார்.