Friday, September 27, 2013

ராஜாராணி - திரைவிமர்சனம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் பெர்ஸ்ட் டே பெர்ஸ்ட் ஷோ இண்டைக்கு காலையில ஈரோஸ் பாமன்கடை தியேட்டர்ல, இயக்குனர்  அட்லீ வேற ப்ரொஃபஷனல் எதிக்ஸ் அதானுங்க தொழில்தந்திரமுன்னு சொல்லி ஆர்யா-நயந்தாரா கலியாணம் எண்டு வேற போஸ்டர் அடிச்சு ஒட்டியிருந்தார் எல்லோ இண்டைக்கு கிளாஸ் இல்லாததால என்னதான்னு பார்ப்பம் எண்டு போயிருந்தன்.
                                     இண்டைக்கு வெள்ளிக்கிழமை வேலை நாள் எண்டாலும் மோர்னிங் ஷோ 10.30க்கு தியேட்டர் கிட்ட முட்ட நிரம்பிதான் இருந்துச்சு. இந்த தியேட்டர் காரனுங்க டிக்கெட்ல 230 ரூபான்னுதான் அடிச்சிருக்கிறாங்க அப்புறம் ஏன் 300 ரூபா வாங்கிறாங்க? சரி அதை விடுவம்.வழமையா முதல் நாள் முதல் காட்சிக்கு பசங்க கூட்டமாதான் இருக்கும் பொன்னுகளை காண்பது அரிது, ஆனா ஜெயம் ரவிக்கு அப்புறம் ஆர்யாக்குதான் நிறைய பெண் ரசிகைகள் போல அவங்களும் வந்திருந்தாங்க. அப்புறம் பசங்களை பற்றி சொல்லவும்வேணுமா இந்த நேர கனவுக்கன்னி நஸ்ரியா நஸீம் இருக்கானுக,அப்புறம் என்னதான் சிம்பு,பிரபுதேவா எண்டு அடி வாங்கியிருந்தாலும்  அடுத்த ரௌண்டுக்கு தயாராகி கட்டுகுலையாமல் இருக்கிற கட்டழகி 9தாரா மற்றும் இன்னொரு மீள்வருகை ஜெய் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது ஏர் முருகதாஸ் இணைத்தயாரிப்பில் அட்லீ எழுதி இயக்கியிருந்தார்.
                                                                 படம் ரீல்ஸ் ஓட தொடங்கியது நட்சத்திர நாயகனுக்கோ,கனவுக்கன்னிக்கோ கிடைக்காத கைதட்டலும் ஆரவாரமும் இப்போ எல்லா படத்தில் ஆரம்பத்தில் வரும் டாக்டர் பிரசாத்துக்கும்,குர்கா முகேஷுக்கும் கிடைக்கிறது, இந்த காட்சிப்படுத்தல்களால ஏதாவது பிரயோசனம் இருக்கா? வெறும் கேலி கூத்தாக பார்க்கபடுகிற இதையெல்லாம் ஏன் இன்னமும் ஒவ்வொரு படத்தின் ஆரம்பத்திலும் சேர்க்கிறார்கள். நிஜ படம் சேர்ச்இல் ஜான்(ஆர்யா),ரெஜினா(நயன்தாரா) திருமண காட்சியுடன் ஆரம்பமாகிறது, ஃபாதர் ஜானை பார்த்து ரெஜினாவை திருமணம் செய்ய சம்மதமா எண்டு கேட்பார் ஆர்யாவும் வேண்டாவெறுப்பாக சொல்லுவார் ஆம் எண்டு இதையே நயந்தாரவையும் கேட்குபோது அவர் தடுமாற்றமாக சூரியா என்று சொல்லவும் உடனே அவர் அப்பா சத்தியராஜுக்கு நெஞ்சு வலி இப்பிடி தடங்கல்களுடன் ஒரு மாதிரி சமூகத்துக்கு கலியாணம் என்ற காட்சி முடிகிறது.
                       ஆர்யாவும்,நயந்தாராவும் ஒரே வீட்டில் ஒரே கட்டிலில் படுக்கிறார்கள் கணவன்,மனைவி என்ற பெயருக்கு மட்டும், இருவருக்கும் சுத்தமாகவே ஒருவரையொருவர் பிடிக்காது. இதில் ஆர்யா தினம் தினம் தண்ணி அடித்து விட்டு இரவு லேட்டா வந்து நயன்தாரா அருகிலேயே படுக்கிறார், இடையில டாஸ்மாக்குல ஆர்யாவும், நண்பர் சந்தானமும் இருக்கும் போது ஒரு பாட்டு, அதென்ன இப்போ வரும் படங்களில எல்லாம் டாஸ்மாக்குல ஒரு பாட்டு வைக்கோணும் எண்டது எழுதப்படாத விதியோ? ஒருநாள் டி‌வி சத்தம் அதிகமாக போட்டு எரிச்சலூடுகிறார் ஆர்யா, நயந்தாராவுக்கு மன அழுத்தம் அதிகமாகி  வலிப்பு போன்று ஆஸ்பத்திரியில்  மோசமான நிலையில் அனுமதிக்கபடுகிறார்.அங்கே டாக்டர் கேட்கும்போது நயன்தாராவின் பெயர்,வயது கூட தெரியாத கணவனாம், இதில் பரிதாபப்பட்டு ஆர்யா நயந்தாராவுடன் ஆறுதலாக கதைக்கும்போதுதான் நயனுக்கு முதலும் இப்பிடி நடந்ததா எனும்போதுதான்  ரெஜினாவின் முன்னைய வாழ்க்கை விரிகிறது அது என்ன பிறகு ஏன் திருமணம் முடித்தார் என்பதை திரையில் கண்டுகொள்ளுங்கள்.
                                            பிறகு கதை இன்னைய நிலைக்கு வந்து நயன்தாரா குணமடைந்து வர நெருக்கமாக நினைக்கும் ஆர்யாவை எல்லோர் முன்னிலையிலும் அவமானபடுத்துகிறார், இதனால் கலங்கி போகின்றார் ஆர்யா இந்நிலையில்இதனை பார்த்து சந்தானம் நயன்தாராவிடம் ஆர்யாவின் முன்னைய வாழ்கையை பற்றி கூறுகிறார் அதையும் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், இதை கேட்டு நயன்தாரா மனம் மாறி வரும்போது ஆர்யா பொரிந்து தள்ளுகிறார். இப்படியே மாறி மாறி போய்க்கொண்டிருக்கிறது இறுதியில் என்ன நடந்தது டிவிஸ்ட் என்பதையும் திரையிலையே கண்டுகொள்ளுங்கள். படத்தில் சத்யன்,நான் கடவுள் ராஜேந்திரன் என்று நிறையபட்டாளமே நடித்திருந்தது ஒவ்வொருதரும் கதையின் அவ்அப் பகுதிகளில் கச்சிதமாக பொருந்தி போனார்கள்.


                                                                                                                                       படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ் பாடல்கள் வந்த நாட்கள் முதலே கேட்ககூடியதாகவே இருந்தது, காட்சியமைப்புகளுடன் பொருந்தி போகின்றது. வசனம் அட்லீ ரசிக்க கூடியதாக அதேநேரம் அர்த்தம் உள்ளதாக இருக்கின்றது. படத்தின் டிரைலரே பிடித்திருந்தது அதில் பார்த்ததும் முதல் கலியாணம் பின் அதுக்கு பின்னரான காட்சிகள் போன்று இருந்தது ஆனால் படத்தில்திருமணத்துக்கு முன்னரான வாழ்க்கையை சிறப்பாகவே இணைத்திருந்தார். படத்தின் இறுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் என்று முடித்திருந்தார் அட்லீ, உண்மையும் பெரும்பாலும் அதாகவே உள்ளது சிறு சிறு சண்டைகள், புரிந்துணர்வு இல்லாமை உடனே தீர்வு டைவோஸ். இருந்தாலும் அட்லீ ஜெயின் பாத்திரமூடாக சொன்ன விடயத்துடன் நான் உடன்படவில்லை அப்பா ஒத்துக்க மாட்டார் என்றால் இது லவ் பண்ணும்போது எங்க போனது? எது கண்ணை மறைச்சது? பிரச்சினை என்று வந்தவுடன் அந்தரத்தில் விட்டுடு போறது இது பசங்களுக்கு மட்டுமல்ல முக்கியமாக பெரும்பாலான பொன்னுகளுக்கும்தான் ஆரம்பதில் காதல் அதை தவிர வேறொன்றுமில்லை அப்புறம் கொஞ்ச காலத்துக்கு பிறகு அறிவுக்கண் திறந்து அம்மா ஆட்டுக்குட்டி அண்ணா, இதெல்லாம் முதல் எங்க போனது? இதுக்கு அந்த பொடியன் நம்பி ஏமாந்து சிக்கி சீரழிஞ்சு நாசமாகி நடுரோட்டில அவண்ட வீட்டையும் இல்லாம நிப்பான்.
                  மொத்தத்தில்  வருத்தபடா வாலிபர் சங்கம் போல காமெடி எண்டு சொல்லி காட்டுற சூர மொக்கைகளுக்குள்ள நிறைய நாளைக்கு அப்புறம் ஒரு படம் பார்த்த திருப்தி.கீழ இருக்கிறமாதிரி காதல் தோல்விக்கு அப்புறம் இருக்கிற வாழ்கையையும்,காதலையும் நானும் விரைவில பார்ப்பனோ? :P

                                                   There is life after love failure.
                                                   There is love after love failure.
     

No comments: