Monday, January 30, 2012

தைத்திருநாளில் வல்வையில் நடக்கும் மார்கழி பிள்ளையார் எடுத்தலும்,பட்ட போட்டியும்

 தைத்திருநாள் அன்று வல்வையில் மாலைநேரம் பட்டபோட்டியும், பின் இரவு நெடியகாடு இளைஞர்களால் மார்கழி பிள்ளையார் சேகரிக்கும் நிகழ்வும் வருடாவருடம் நடைபெறும். இடையில் நாட்டில் நிலவிய போர்க்கால நிலமைகளால் தடைப்பட்டிருந்தது. போன வருடம் முதல் பட்டபோட்டியும்,அதுக்கு சில வருடங்கள் முன்பிருந்து மார்கழி பிள்ளையார் எடுக்கும் நிகழ்வும் நாட்டு நிலமைகள் ஓரளவு சீரானதால் தற்போது நடைபெற்று வருகின்றன.
















1.மார்கழி பிள்ளையார் எடுத்தல்
தைத்திருநாள் அன்று இரவு வேளையில் நெடியகாடு இளைஞர்களால் இந்த மார்கழி பிள்ளையார் எடுக்கும் நிகழ்வு நடாத்தபடுகிறது.இது இற்றைக்கு ஏறத்தாள 70 வருடங்களாக நடைபெற்று வருகிறது.இது நெடியகாடு பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து வல்வெட்டித்துறை சந்தி வழியாக நேரே ஆதிவைரவர் கோவில் வரை சென்று பின் அங்கிருந்து வல்வெட்டித்துறை சந்தி வந்து திரும்பி தெணியம்பை வழியாக மருதடி வரை சென்று பின் அங்கிருந்து மீண்டும் சந்தி வந்து நெடியகாடு வழியாக ஊறணி வரை ஊர்வலமாக சென்று ஊறணி தீர்த்தகடலில் பிள்ளையார் கரைத்தலுடன் நிறைவு பெறும்.
                               




































                            ஆரம்ப காலங்களில் சிறிய தேர் ஒன்றை இழுத்து சென்றே பிள்ளையார் சேர்த்து கடலில் சேர்ப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதன் நினைவாக இப்போதும் இரண்டாவது படத்தில் மேலே உள்ளது போன்று லைட் என்ஜின் சகடையின் முன்புறம் தேர் போன்று அலங்கரிக்கபட்டு இருக்கும்.நடக்கும் இந்த ஊர்வலத்தில் ஒவ்வொரு வருடமும் நெடியகாடு இளைஞர்கள் வித்தியாசம் வித்தியாசமான பிரமாண்ட டிராகன்கள் மாதக்கணக்காக மினக்கெட்டு செய்வார்கள். அத்துடன் மாறுவேடமணிந்த இளைஞர்களும் பறை வாத்தியம் முழங்க ஊர்வலத்தில் செல்வார்கள்.அண்மைய காலங்களில் செய்யபட்ட உருவங்கள் எனது கமேராவில் சிக்கியதை நீங்கள் காணலாம்.



2.பட்ட போட்டி
பட்ட போட்டியும் ஏறத்தாள 50 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலங்களில் வல்வை சனசமூக நிலையத்தால் ரேவடி கடற்கரையிலேயே நடைபெற்று வந்துள்ளது. பின் இப்போது விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்/உதயசூரியன் விளையாட்டு கழகத்தால் உதயசூரியன் உல்லாச(?) கடற்கரையில் நடைபெற்று வருகிறது. 94 பருவகால பகுதிக்கு பிறகுதான் இங்கு மாறியிருக்கவேண்டும் என நினைக்கிறேன் ஏன் எனில் 94இல் பருவகால பகுதியில் நடந்த பட்ட போட்டியின்போதே நான் பட்டம் பார்த்து கொண்டு அப்பிடியே போய் கடலில் விழுந்ததாக சொல்லுவார்கள். இங்கு பல இடங்களில் இருந்தும் வந்து பட்டபோட்டியில் கலந்து கொள்வார்கள், பட்டத்தின் அமைப்பு,நூலின் நீளம் என நடுவர்களால் தெரிவுசெய்யபட்டு பெறுமதிமிக்க பரிசில்கள் ஒவ்வொரு முறையும் வழங்கப்படும்.ஒவ்வொரு முறையும் வித்தியாசம் வித்தியாசமான பட்டங்கள் கலந்து கொள்ளும், என்ன இருந்தும் ஆரம்ப காலங்களில் இருப்பது போன்று இருப்பதில்லை, இம்முறை பொங்கல் பானை,பாறாத்தல்,கொக்கு,சுழலும் இரட்டை பெட்டி, 60 அடி(?) பாம்பு பட்டம்,கிபீர்,டிராகன் உள்ளிட்ட பட்டங்கள் கலந்து கொண்டிருந்த போதிலும் காலத்தின் கோலமோ என்னமோ தெரியவில்லை, சிறுவன் ஒருவனால் பியர் டின் பட்டமும் கொண்டுவரபட்டிருந்தது.



















Thursday, January 12, 2012

நண்பன்-ஆல் இஸ் வெல்

இன்று முதல் நாள் முதல் ஷோ முதல்முதலாக விஜய் படம் பார்க்க சென்று இருந்தேன், மேலும் 3 இடியட்ஸ் ஹிந்தியில் கைப்பற்றிய மாபெரும் வெற்றி மேலும் ஷங்கர் படம்,ஏலவே வெளிவந்து ஹிட் ஆன பாடல்கள் என்று மாபெரும் எதிர்பார்ப்புகளுடன்தான் சென்று இருந்தேன். ஆனால் எந்தவித ஏமாற்றத்தையும் அளிக்காது முற்று முழுதாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தது.
 
உங்களுக்கு கதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை 3 இடியட்ஸ் ரீமேக்தான்.தமிழ் பதிப்பில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா, சத்யன் , சத்தியராஜ்,எஸ்‌ஜெசூரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இயக்கம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெய்வதிருமகள் விஜய் போல கதை, தான் என்று போடாமல் தனது இயக்கத்தின் மூலமாகவே எல்லோரையும் கட்டி போட்டுஇருக்கிறார். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா அபாரமாக செய்திருக்கிறார் பாடல் காட்சிகள் ரசிக்க வைத்தன.

மேலும் முதலே கவர்ந்த பாடல்களான அஸ்கு லஸ்கா,ஜெல்லி பெல்லி பாடல்கள் காட்சி அமைப்பின் பின் மேலும் பிடித்து தொலைக்கின்றன. அதிலும் அஸ்கு லஸ்காவில் வரும் மாடர்ன் சாங்க்,ரோயல் சாங்க்,குத்து பாடல் என்று காண்பிப்பதன் மூலம் ஷங்கர் தனது பிம்பத்தை உடைத்துள்ளார்.அடுத்து ஜெல்லி பெல்லி இலியானாவின் இடுப்பாட்டம் ரொம்பவே கலக்கலாக உள்ளது. விஜய் பற்றி பாடல் காட்சிகளில் சொல்லவே தேவையில்லை அந்த மாதிரி கலக்கி உள்ளார். மேலும் சத்யன் நிகழ்த்தும் அந்த வரவேற்புரை சிரித்து சிரித்து முடியவில்லை.கலவி-கல்வி,கற்ப்பித்தல்-கற்பழித்தல் சரியாக பொருந்தி போகிறது. மேலும் காதல் வந்தால் எப்பிடி இருக்கும் என்று விஜய் இலியானாவிடம் சொல்லும்போது அதுக்கு இலியானா இதெல்லாம் ஷங்கர் படங்களில் மட்டும்தான் என்று கூறும்போது திரையரங்கில் என்ன வரவேற்பு.



விஜய் அபாரமாக நடித்துள்ளார் அதே போலவே ஸ்ரீகாந்த்,ஜீவா,அந்த மில்லிமீட்டர் பையன்,சத்தியராஜ்,இலியானா,அனுயா என அனைவரும் கலக்கியுள்ளனர். கேடி படத்தில் அறிமுகமாகிய இலியானாவுக்கும் இப்போதும் நிறைய வித்தியாசம், விஜய்க்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இவ்வாண்டு கல்யாணகோலத்தில் வந்துபோவார். பெல்லி டான்ஸ் அருமையாக செய்துள்ளார். மொத்தத்தில் நண்பன் விஜய்,ஷங்கருக்கு மாபெரும் வெற்றி. ஷங்கரிடம் இருந்து எந்திரன் போன்ற படங்களை விட நண்பன் போன்ற படங்களையே எதிர்பாக்கிறேன்.இன்றுதான் தியேட்டரில் எனது வாழ்நாளில் முதல்முதலாக சிரிச்சு,ரசித்து ஆத்ம திருப்தியாக படம் பார்த்தேன்.


                                                                 



















                             


















                                                                                                                                                               

Monday, January 2, 2012

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-2

 ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.நாங்கள் கப்-சிப் என அமைதியானோம்.சபாநாயகர் ஜனா எங்களை எச்சரிக்கை செய்தார்.எங்களுக்கு வந்ததே ஒரு கோபம், எனினும் அடக்கிகொண்டு நானும் மைந்தன் சிவாவும் பிளான் போட்டோம் இங்க இருக்கிற செங்கோலை ஒரு நாள் சுட்டுட்டு போய் எமது திறமையை நிரூபிக்கோனும் என்று.
                                         அடுத்து சபாநாயகர் மூத்த பதிவர்,முதியோர் நலன்,சுற்றுலா அமைச்சர் கானபிரபாவை உரையாற்ற அழைத்தார்.கானபிரபா அண்ணனும் தான் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறோம் என்பதை மறந்து ட்விட்டரில் இருப்பதாய் எண்ணி காலை இனிதே விடிந்தது  என்று பேச்சை ஆரம்பித்தார் சபையினர் எல்லோரும் கல கலவென சிரித்தனர் அப்போ தொல்லியல்,கலாச்சார அமைச்சர் மெர்வின் போன்று சொசெசூ காரியங்களில் ஈடுபடும் இன்னோர் மூத்த பதவி பதிவர் வந்தியதேவனும் பாராளுமன்றத்தில் இருப்போம் என்பதை உணராது பெரியப்பூ இப்ப விடிஞ்சு நேரமாச்சு என்றார், ஏலவே பாராளுமன்றத்தில் மாறி பேசிவிட்டோம் என்று கடுப்பில் இருந்த கானபிரபா அண்ணனுக்கு வந்தியதேவன் பெரியப்பூ என்று கூறி தனது வயதை வெளிக்காட்டி விட்டார் என்று மேலும் கடுப்பில் இருந்தார்.இருந்தும் தன்னை சுதாகரித்து கொண்டு பேச்சை தொடர்ந்தார், நாட்டிலுள்ள முதியவர்கள் உடல்நலத்துடன்  வாழ நாடு முழுதும் ஜிம் பயிற்சி நிலையங்கள் அமைத்து காலையும் மாலையும் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தான் இவ்வாறு ஜிம் செய்வதால் இப்போதும் இளமையாக இருப்பதாக கூறி முதியவர் என சபைக்கு தெரியவந்தாலும் இள ரத்தமாக காட்ட இப்படி பீலா விட்டார். மேலும் சுற்றுலா அமைச்சும் தன்னுடையது என்பதால் அது தொடர்பாக தொடர்ந்து பேசினார் தான் இப்படி இளமை துள்ளலாக இருப்பதால்தான் பாங்கொங்க் அங்கு இங்கு என்று பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தன்னை கேரள கன்னியர்கள் பார்ப்பதாக கூறினார்.
                                                                                                                                                            இப்படியாக கானபிரபா அண்ணே உரையாற்றி முடிந்ததும் அடுத்து சபாநாயகர் போக்குவரத்து, பல்கலைதுறை அமைச்சர் அனுதினன் அவர்களை உரையாற்ற அழைத்தார்.வணக்கம் நண்பர்ஸ் என அனுதினன் தான் ட்விட்டரில் வந்து போறமாதிரி பேச்சை ஆரம்பித்தார், அப்போ இடைமறித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் இம்முறை பல்கலைதெரிவில் அநீதி இழைக்கப்ப்ட்டுளது இதுக்கு நீங்க என்ன பதில் அளிக்க போகின்றீர்கள் என சீரியஸ் ஆக கேள்வி கேட்டார் ஆனால் அனுதினனோ யார் வந்தால் நமக்கென்ன வரும் பிகர்களை சைட் அடிக்கோனும் நமக்கென்ன முடியுமோ அதைதானே பண்ணனும் நான் இந்த வருசத்தையே வெடிக்கு பயந்து ஒதுங்கும் பெண்களை சைட் அடிச்சே ஆரம்பிச்சேன் அப்ப இந்த வருஷம் கொண்டாட்டம்தான் என்று கூறினார், இதை கேட்ட சபாநாயகர் ஜனா என்னது பல்கலை அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசுகிறீர் என்று கேட்டார் அதுக்கு அனுதினன் 
என் சில நண்பர்கள் அநியாயத்துக்கு நல்லவர்களாகஇருப்பதால், என்னையும் அப்படியே பாக்கிறார்கள். #நான்_பொறுப்பல்ல என்று தனது பாணியில் பதில் அளித்தார். சரி இதை விடும் உமது அடுத்த அமைச்சு போக்குவரத்து துறை பற்றி பேசுவோம் என்று கூறினார். தனதுரையை தொடர்ந்த அனுதினன் ஆமாம் நான் இந்த அமைச்சை மிகவும் கவனமாக கையாளுகிறேன் நான் பஸ்ஸில்  எல்லா இடமும் செல்லும்போதும் சந்திக்கு சந்தி அப்டேட் கொடுத்து கொண்டிருக்கிறேன் அப்ப பதிவர் வந்தியதேவன் அப்ப என்ன நீர் பஸ் மாமாவா என கேட்க சபையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

தொடரும்.......