Monday, January 2, 2012

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-2

 ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.நாங்கள் கப்-சிப் என அமைதியானோம்.சபாநாயகர் ஜனா எங்களை எச்சரிக்கை செய்தார்.எங்களுக்கு வந்ததே ஒரு கோபம், எனினும் அடக்கிகொண்டு நானும் மைந்தன் சிவாவும் பிளான் போட்டோம் இங்க இருக்கிற செங்கோலை ஒரு நாள் சுட்டுட்டு போய் எமது திறமையை நிரூபிக்கோனும் என்று.
                                         அடுத்து சபாநாயகர் மூத்த பதிவர்,முதியோர் நலன்,சுற்றுலா அமைச்சர் கானபிரபாவை உரையாற்ற அழைத்தார்.கானபிரபா அண்ணனும் தான் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறோம் என்பதை மறந்து ட்விட்டரில் இருப்பதாய் எண்ணி காலை இனிதே விடிந்தது  என்று பேச்சை ஆரம்பித்தார் சபையினர் எல்லோரும் கல கலவென சிரித்தனர் அப்போ தொல்லியல்,கலாச்சார அமைச்சர் மெர்வின் போன்று சொசெசூ காரியங்களில் ஈடுபடும் இன்னோர் மூத்த பதவி பதிவர் வந்தியதேவனும் பாராளுமன்றத்தில் இருப்போம் என்பதை உணராது பெரியப்பூ இப்ப விடிஞ்சு நேரமாச்சு என்றார், ஏலவே பாராளுமன்றத்தில் மாறி பேசிவிட்டோம் என்று கடுப்பில் இருந்த கானபிரபா அண்ணனுக்கு வந்தியதேவன் பெரியப்பூ என்று கூறி தனது வயதை வெளிக்காட்டி விட்டார் என்று மேலும் கடுப்பில் இருந்தார்.இருந்தும் தன்னை சுதாகரித்து கொண்டு பேச்சை தொடர்ந்தார், நாட்டிலுள்ள முதியவர்கள் உடல்நலத்துடன்  வாழ நாடு முழுதும் ஜிம் பயிற்சி நிலையங்கள் அமைத்து காலையும் மாலையும் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தான் இவ்வாறு ஜிம் செய்வதால் இப்போதும் இளமையாக இருப்பதாக கூறி முதியவர் என சபைக்கு தெரியவந்தாலும் இள ரத்தமாக காட்ட இப்படி பீலா விட்டார். மேலும் சுற்றுலா அமைச்சும் தன்னுடையது என்பதால் அது தொடர்பாக தொடர்ந்து பேசினார் தான் இப்படி இளமை துள்ளலாக இருப்பதால்தான் பாங்கொங்க் அங்கு இங்கு என்று பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தன்னை கேரள கன்னியர்கள் பார்ப்பதாக கூறினார்.
                                                                                                                                                            இப்படியாக கானபிரபா அண்ணே உரையாற்றி முடிந்ததும் அடுத்து சபாநாயகர் போக்குவரத்து, பல்கலைதுறை அமைச்சர் அனுதினன் அவர்களை உரையாற்ற அழைத்தார்.வணக்கம் நண்பர்ஸ் என அனுதினன் தான் ட்விட்டரில் வந்து போறமாதிரி பேச்சை ஆரம்பித்தார், அப்போ இடைமறித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் இம்முறை பல்கலைதெரிவில் அநீதி இழைக்கப்ப்ட்டுளது இதுக்கு நீங்க என்ன பதில் அளிக்க போகின்றீர்கள் என சீரியஸ் ஆக கேள்வி கேட்டார் ஆனால் அனுதினனோ யார் வந்தால் நமக்கென்ன வரும் பிகர்களை சைட் அடிக்கோனும் நமக்கென்ன முடியுமோ அதைதானே பண்ணனும் நான் இந்த வருசத்தையே வெடிக்கு பயந்து ஒதுங்கும் பெண்களை சைட் அடிச்சே ஆரம்பிச்சேன் அப்ப இந்த வருஷம் கொண்டாட்டம்தான் என்று கூறினார், இதை கேட்ட சபாநாயகர் ஜனா என்னது பல்கலை அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசுகிறீர் என்று கேட்டார் அதுக்கு அனுதினன் 
என் சில நண்பர்கள் அநியாயத்துக்கு நல்லவர்களாகஇருப்பதால், என்னையும் அப்படியே பாக்கிறார்கள். #நான்_பொறுப்பல்ல என்று தனது பாணியில் பதில் அளித்தார். சரி இதை விடும் உமது அடுத்த அமைச்சு போக்குவரத்து துறை பற்றி பேசுவோம் என்று கூறினார். தனதுரையை தொடர்ந்த அனுதினன் ஆமாம் நான் இந்த அமைச்சை மிகவும் கவனமாக கையாளுகிறேன் நான் பஸ்ஸில்  எல்லா இடமும் செல்லும்போதும் சந்திக்கு சந்தி அப்டேட் கொடுத்து கொண்டிருக்கிறேன் அப்ப பதிவர் வந்தியதேவன் அப்ப என்ன நீர் பஸ் மாமாவா என கேட்க சபையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

தொடரும்.......

10 comments:

Prapa said...

மேலும் சில மூத்த அமைச்சர்களையும் எதிர்பார்க்கிறோம்.. ஹி ஹி சூப்பர்,

வந்தியத்தேவன் said...

நீ நடத்து ராசா, என்னை விட என் பெரியப்பூ கானாவும் மருமகன் அனுவும் அடிவாங்கியது மகிழ்ச்சி

ஷஹன்ஷா said...

excellent....

இன்னும் எதிர்பார்க்கின்றோம்.. ஆனால் இந்த பதிவில் நகைச்சுவை குறைவாக இருக்கு.. அத்துடன் இன்னும் கொஞ்சம் கூட எழுதினால் நன்று..

Unknown said...

// பிரபா said...
மேலும் சில மூத்த அமைச்சர்களையும் எதிர்பார்க்கிறோம்.. ஹி ஹி சூப்பர்,//

உங்களைதானே சொல்கிறீர்கள்? கவலை வேண்டாம் இனிவரும் பாகங்களில் வரும்.

Unknown said...

//வந்தியத்தேவன் said...
நீ நடத்து ராசா, என்னை விட என் பெரியப்பூ கானாவும் மருமகன் அனுவும் அடிவாங்கியது மகிழ்ச்சி//

கவலை வேண்டாம் இதில் நீங்க சைட் டிஷ் மட்டுமே,

Unknown said...

//“நிலவின்” ஜனகன் said...
excellent....

இன்னும் எதிர்பார்க்கின்றோம்.. ஆனால் இந்த பதிவில் நகைச்சுவை குறைவாக இருக்கு.. அத்துடன் இன்னும் கொஞ்சம் கூட எழுதினால் நன்று..//

பார்ப்போம்,நேரம் கிடைப்பதில்லை

நிரூபன் said...

என்னது இன்னும் தொடருமா?
ஹி...ஹி..
இனி யார் யாரின் தலைகள் உருளப் போகிறதோ?
பிகர்கள் விடயங்களில் தான் ரொம்ப கண்ணும் கருத்துமாக மைந்தனும், நீங்களும் இருக்கிறீங்க போல இருக்கே.

Unknown said...

// நிரூபன் said...
என்னது இன்னும் தொடருமா?
ஹி...ஹி..
இனி யார் யாரின் தலைகள் உருளப் போகிறதோ?
பிகர்கள் விடயங்களில் தான் ரொம்ப கண்ணும் கருத்துமாக மைந்தனும், நீங்களும் இருக்கிறீங்க போல இருக்கே.//

பிரபல பதிவர்களான நீங்கள் எல்லாம் வரவில்லையே,

ஹா ஹா

கானா பிரபா said...

ஆகா நடத்து ராசா, குஞ்சியப்பு வந்தியின் வருகைக்குக் காத்திருக்கிறேன் :)

Unknown said...

//கானா பிரபா said...
ஆகா நடத்து ராசா, குஞ்சியப்பு வந்தியின் வருகைக்குக் காத்திருக்கிறேன் :)//

ஹா ஹா அவர்தானே மிக பெரும் புள்ளி அவரை விட்டு! நினைச்சே பார்க்க முடியல