Friday, October 5, 2012

வல்வெட்டித்துறை நகரசபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்.

நேற்றைய முன்தினம் மதியத்துக்கு பின்னரான பகுதிகளில் இலத்திரனியல் ஊடங்கங்களிலும், நேற்று காலை பத்திரிகைகளிலும் ஆக்கிரமித்திருந்த செய்தி இதுதான் //வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரபிதா ந.அனந்தராஜ்க்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை உபதலைவர் சதீஸ் அவர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரரேரணை ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றப்பட்டது//. நான் நினைக்கிறேன் 'வல்வெட்டித்துறை' என்ற நாமம் நேற்று,இன்று,நாளை என்றுமே செய்தி தீனிக்கு அவலாக இருக்கும் என்று. வல்வெட்டிதுறையிலேயே பிறந்து, வளர்ந்தவன் என்றாலும் இற்றைவரை இது சம்பந்தமாக எந்தவொரு சமூகவலைத்தளத்திலும் கருத்திட்டது கிடையாது. எனினும் இன்று நினைக்கையில் அதுவே எனது பிழை என்று எண்ண தோன்றுகிறது.எனது ஆளுமைக்கு எட்டிய வகையில்,நான் இங்கே இருந்து கண்ணூடாக பார்த்து,செவிவழி கேட்டதை கொண்டு இதன் பின்னணியில் உள்ள தார்ப்பரியங்களை கீழே வரையலாம் என்று நினைக்கிறேன்.

                                                                                                                              இந்த விடயத்தை வேட்பாளர் தெரிவு ஆரம்பித்தநாட்களில் இருந்து எனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.முதலில் தேர்தல் அறிவிக்கபட்ட உடனே ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன, பணத்துக்காக விலை போய் யானை கட்சியில் இருந்து  கூட எமது ஊரிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர் , ஆனால் இறுதியில் அவர்களே அவர்களுக்கு வாக்கு போட்டார்களா என்பதே கேள்விக்குறி, அடுத்தது ஈழமக்கள் ஜனநாயக கட்சி, அதைபற்றியும் நான் இங்கு பேசப்பபோவதில்லை ஏனெனில் உண்மையாகவே தெரிவுசெய்யபட்ட இருவரை தவிர வேறு யார் போட்டியிட்டாளர்கள் என்றே எனக்கு தெரியாது.

                                        அடுத்து முக்கியமான தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கு வந்தால் இவர்கள் அனைவரும் எந்தவிதத்தில் தலைமப்பீட்டத்தால் தெரிவு செய்யபட்டார்கள்? என்று கூட்டமைப்பு விளக்கவேண்டும். ஒன்று கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர்கள் இருவரின் விருப்பத்துக்கு(?) அமைய ஒருவர் தெரிவு செய்யபட்டு அவர் மூலமாக இன்னும் சிலர் தெரிவுசெய்யபட்டிருந்தனர். ஆனால் அவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்தது அவர்களின் எதிர்காலத்திட்டங்களை கருத்தில்கொண்டு அதாவது சிவாஜிலிங்கம் நகரசபையில் தெரிவு செய்யப்படபோவது உறுதியாக இருந்தாலும் வாக்குகளை உடைத்து அவருக்கு அவரின் ஊரிலேயே வாக்குபலம் இல்லை என்று காட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றதேர்தல்களில் அவரை தமக்கு போட்டியாளர் இல்லாமல் ஆக்கிகொள்வது. இது அவர்களால் பிரயோகிக்கபட்ட அந்த உறுப்பினருக்கு அவ்வளவு தெரியாமல் இருக்க அவர் ஒன்றும் கல்விதகுதிகள் குறைந்தவர் அல்ல.மற்றதோர் தெரிவு வழமையான தமிழ்தேசியகூட்டமைப்பு என்பதை உணர்த்துவதுக்கு வெள்ளைதலைமுடிகாரரையும் தெரிவு செய்திருந்தது,இதுக்கு அவர் ஊரின் பிரபல பாடசாலை பழையமாணவர்சங்க பதவிகளில் கூட இருந்திருக்கிறார், இருந்தும் அவர் ஊருக்கு வரும் நாட்களை எண்ணலாம். அப்பிடியான ஒருவரை ஏன் தெரிவுசெய்கிறீர்கள்? மிகுதி போட்டியாளர்களும் முன்னணி வேட்பாளரின் அடுத்தவர் மூலம் தெரிவு செய்யபட்டனர், சுட்டிகாட்டவேண்டிய நல்ல தெரிவு யாதெனில் கூட்டமைப்பின் விதிகளுக்கு மாறாக ஒரு இளம் வேட்பாளரும் தெரிவு செய்யபட்டிருந்தார்.இவற்றின் மூலம் யான் சொல்லவருவது இனி வரும் தேர்தல்களிலாவது கூட்டமைப்பின் உயர்பீடம் சரியான தெரிவுகளை மேற்கொள்ளவேண்டும்,புது இளம் ரத்தங்களை பாய்ச்சவேண்டும். தெரிவு செய்யும் ஒவ்வொரும் இதுவரைகாலமும் சமூக,கலை,கலாச்சார என்னமாதிரியான பங்களிப்புகள் வழங்கியிருக்கின்றனர் என்று நோக்கப்படவேண்டும்.
                                                                                       அடுத்து தேர்தலும் முடிந்தது, நானும் ஒரு வாக்காளனாக எனது ஜனநாயக கடமையை செவ்வனவே நிறைவேற்றியிருந்தேன்.இருந்தும் வாக்களிப்புவீதம் குறைவாகவே இருந்தது.முடிவுகள் வந்தன, கூட்டமைப்பில் இருந்து 7 பேரும்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து 2 பேரும் தெரிவு செய்யபட்டனர்.அடுத்த கேள்வி யார் நகரபிதா என்பது, தேர்தலுக்கு முன்பே கட்சி தெரிவுசெய்துவிட்டதாகவும் சுழற்சிமுறையில் இருவர் பதவிவகிப்பார்கள் என்று ஊகங்கள் வெளியிடபட்டன,இருந்தும் இறுதியில் கூடியவாக்குகள் பெற்றவர் என்ற ரீதியில் ந.அனந்தராஜ் தலைவராக தெரிவுசெய்யபட்டார். அன்றிலிருந்தே நகரபிதாக்கும்,சிவாஜிலிங்கத்துக்கும் இடையில் பனிப்போர் மூண்டது, கீரியும்,பாம்பும் ரேஞ்சுக்குதான் இருந்தது, அதுவும் ஊரில் நடந்த பொதுநிகழ்ச்சிகளில் சிலவற்றுக்கு நானும் போயிருந்தேன். அங்கே நடப்பவற்றை பார்க்கும்போது இதையெல்லாம் ஏன் படங்களில் காமெடி காட்சிகளில் சேர்க்ககூடாது என்ற அளவுக்கு இருந்தது.

                                        இப்பிடி போய்க்கொண்டிருந்தநிலையில்தான் மாட்டிறைச்சிகடையை ஏலம் விடுவதில் உறுப்பினர் ஒருவர் கையூட்டு பெற்றுகொண்டு 2ஆம் கேள்விக்காரருக்கு கொடுப்பதுக்கு சம்மதித்தது மட்டுமில்லாமல் முத்திரையில் கையொப்பம் இட்டும் கொடுத்திருந்தார், இது இணையதளங்களிலும்,குடாநாட்டு பத்திரிகையிலும் வெளியாக பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.இதுவே நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடபட்ட முதலாவது காரணம். இந்த பிரச்சினை காலவோட்டத்தில் மறைந்துவிட்டது, இவ்வளவு ஒரு பெரிய குற்றசாட்டு ஊடகங்களில் வெளியானபோதும் கூட்டமைப்பின் உயர்பீடம் இதுக்கு என்ன நடவடிக்கை எடுத்தது? சம்பந்தபட்ட உறுப்பினர் ஏன் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தபடவில்லை? இதிலிருந்தே ஒன்று விளங்கியது கூட்டமைப்பின் உயர்பீடமும் இங்கே நடக்கும் பிச்சு,புடுங்கல்களை விரும்பியே வந்துள்ளது.

                                                                           இறுதியாக இவ் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வந்தால் அதில் குறிப்பிடபட்டிருந்த இரண்டாவது காரணம் வல்வெட்டித்துறை பொதுஅமைப்புகளின் மீது அபாண்ட குற்றசாட்டுக்கள் சுமத்தியமை,அரசாங்க பாடசாலை அதிபர்,ஆசிரியர் ,தனிநபர்களை அவமதித்தமை.இதுபற்றி முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாகவும் அறிந்துகொண்டேன்.இதில் ஓரளவு யதார்த்தமும்தான் இருக்கிறது, அண்மையில் நகரசபைக்குட்பட்ட புகழ்பெற்ற முருகன் ஆலயதிருவிழா ஒன்றின் போது காவடிக்கு இடையூறு எற்ற்படுத்தியிருந்தார் என்று செவி வாயிலா அறிந்திருந்தேன்.அடுத்து நகரபிதா வல்வெட்டித்துறை நகரபிதாதான், அமெரிக்க ஜனாதிபதியல்ல அதை கருத்தில் கொள்ளவேண்டும், தேவையில்லாமல் எல்லா விடயங்களிலும் தமது சுயலாபத்தை கருத்தில் கொண்டு மூக்கை நுழைத்து, திருவிழா கூட்டத்தில்  தொலைந்து போன பிள்ளை போல நடுவில் நின்று மூக்குடைபடுவதை தவிர்க்கவேண்டும்.அடுத்தது சிவாஜிலிங்கம் எடுத்ததுக்கெல்லாம் எதிர்ப்பு அரசியலை பாவிக்ககூடாது. ஒரு சில நல்ல வேலைத்திட்டங்கள்தான் நிறைவேறும், அவற்றை ஆதரிக்கவேண்டும்.

                                                                                              அடுத்தது இவ்வளவு எல்லாம் நடைபெறும்போது இது பற்றி செய்தி வெளியிடும் இணையத்தளங்கள் பற்றி சொல்லியாகவேண்டும்.இன்று பேஸ்புக்கில் ஒரு கமெண்ட் பார்த்தேன் //வல்வெட்டித்துறை நகர சபையில் மீண்டும் குழப்பம் - கனடிய ஊடகங்களின் நேற்றைய முக்கிய செய்தி// எனக்கு பார்த்தஉடனே சிரிப்புதான் வந்தது. இவ் இணையயதளங்களின் நோக்கம் வாசகர்களை கவருவதான், அதற்காக யதார்த்தம் என்ன என்பதை வெளிபடுத்தாமல் தமது ஊகங்களின் மூலம் திரிபுபடுத்தபட்ட கண்ணோட்டத்தை புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களுக்கு வழங்குவதன் மூலம் இங்கே முற்றிலும் ஒரு குழப்பமான நிலையே இருக்கின்றது என்ற மாயை ஏற்படுத்துவதன் மூலம், இங்கு வரவிருக்கும் உதவிதிட்டங்களைதடுக்க முனைகிறார்களா? அடுத்து மேற்படி இணையத்தளங்களின் உரிமையாளர்கள் யார் என்பதும் சந்தேகமாகவே உள்ளது. அடுத்து ஊர் பெயரில் இயங்கும் இணையத்தளங்கள் முக்கிய இருவரின் ஒவ்வொருவருக்கும் பக்கசார்பாகவே இயங்குகின்றது போலத்தோன்றுகிறது இவற்றின் செய்தி தயாரிப்பு முறைகளை பார்க்கும்போது எண்ணவைக்கிறது.

                                                                          அடுத்து இவ்வளவு நடந்தும் தமது கட்சி ஆட்சியில் உள்ள நகரசபை ஒன்றில், நகரபிதாவுக்கு எதிராக தமது கட்சிஉறுபினர்களே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும்போது கட்சியின் தலைமைப்பீடம் எங்கு பாத்துகொண்டிருத்தார்கள்? அல்லது தலைமைப்பீடத்துக்கு  இது பற்றி முன்கூட்டியே தெரியுமா? நேற்று முன்தினம் இணையத்தளம்,நேற்று பத்திரிகையில் செய்தி வெளியாகிருந்தபோதும், கூட்டமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவரும் ஏன் இத்தருணம் வரை ஒரு விளக்கமும் வழங்கவில்லை? குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க கூட்டமைப்பு முயல்கிறதா? இப்பிடி ஒரு குழப்பமான நிலையிலே வைத்திருப்பதன்மூலம் இப்பிரதேசத்தில் இருந்து உறுதியான அரசியல் பேரம் பேசும் சக்தி வருவதை தடுக்க முனைகிறதா? தங்களின் இடங்களுக்கு போட்டியாக வரும் என்று அஞ்சுகிறார்களா? எவ்வளவு நாளைக்குத்தான் தேசியத்தின் மூலம் முன்னொருகாலத்தில் கிடைத்த ஆணையை வைத்து அரசியல் நடத்தபோகிறீர்கள்? மாற்றுதெரிவு இல்லை என்பது விரைவில் பொய்யாக்கபோகிறீர்களா?

Monday, January 30, 2012

தைத்திருநாளில் வல்வையில் நடக்கும் மார்கழி பிள்ளையார் எடுத்தலும்,பட்ட போட்டியும்

 தைத்திருநாள் அன்று வல்வையில் மாலைநேரம் பட்டபோட்டியும், பின் இரவு நெடியகாடு இளைஞர்களால் மார்கழி பிள்ளையார் சேகரிக்கும் நிகழ்வும் வருடாவருடம் நடைபெறும். இடையில் நாட்டில் நிலவிய போர்க்கால நிலமைகளால் தடைப்பட்டிருந்தது. போன வருடம் முதல் பட்டபோட்டியும்,அதுக்கு சில வருடங்கள் முன்பிருந்து மார்கழி பிள்ளையார் எடுக்கும் நிகழ்வும் நாட்டு நிலமைகள் ஓரளவு சீரானதால் தற்போது நடைபெற்று வருகின்றன.
















1.மார்கழி பிள்ளையார் எடுத்தல்
தைத்திருநாள் அன்று இரவு வேளையில் நெடியகாடு இளைஞர்களால் இந்த மார்கழி பிள்ளையார் எடுக்கும் நிகழ்வு நடாத்தபடுகிறது.இது இற்றைக்கு ஏறத்தாள 70 வருடங்களாக நடைபெற்று வருகிறது.இது நெடியகாடு பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து வல்வெட்டித்துறை சந்தி வழியாக நேரே ஆதிவைரவர் கோவில் வரை சென்று பின் அங்கிருந்து வல்வெட்டித்துறை சந்தி வந்து திரும்பி தெணியம்பை வழியாக மருதடி வரை சென்று பின் அங்கிருந்து மீண்டும் சந்தி வந்து நெடியகாடு வழியாக ஊறணி வரை ஊர்வலமாக சென்று ஊறணி தீர்த்தகடலில் பிள்ளையார் கரைத்தலுடன் நிறைவு பெறும்.
                               




































                            ஆரம்ப காலங்களில் சிறிய தேர் ஒன்றை இழுத்து சென்றே பிள்ளையார் சேர்த்து கடலில் சேர்ப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதன் நினைவாக இப்போதும் இரண்டாவது படத்தில் மேலே உள்ளது போன்று லைட் என்ஜின் சகடையின் முன்புறம் தேர் போன்று அலங்கரிக்கபட்டு இருக்கும்.நடக்கும் இந்த ஊர்வலத்தில் ஒவ்வொரு வருடமும் நெடியகாடு இளைஞர்கள் வித்தியாசம் வித்தியாசமான பிரமாண்ட டிராகன்கள் மாதக்கணக்காக மினக்கெட்டு செய்வார்கள். அத்துடன் மாறுவேடமணிந்த இளைஞர்களும் பறை வாத்தியம் முழங்க ஊர்வலத்தில் செல்வார்கள்.அண்மைய காலங்களில் செய்யபட்ட உருவங்கள் எனது கமேராவில் சிக்கியதை நீங்கள் காணலாம்.



2.பட்ட போட்டி
பட்ட போட்டியும் ஏறத்தாள 50 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலங்களில் வல்வை சனசமூக நிலையத்தால் ரேவடி கடற்கரையிலேயே நடைபெற்று வந்துள்ளது. பின் இப்போது விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்/உதயசூரியன் விளையாட்டு கழகத்தால் உதயசூரியன் உல்லாச(?) கடற்கரையில் நடைபெற்று வருகிறது. 94 பருவகால பகுதிக்கு பிறகுதான் இங்கு மாறியிருக்கவேண்டும் என நினைக்கிறேன் ஏன் எனில் 94இல் பருவகால பகுதியில் நடந்த பட்ட போட்டியின்போதே நான் பட்டம் பார்த்து கொண்டு அப்பிடியே போய் கடலில் விழுந்ததாக சொல்லுவார்கள். இங்கு பல இடங்களில் இருந்தும் வந்து பட்டபோட்டியில் கலந்து கொள்வார்கள், பட்டத்தின் அமைப்பு,நூலின் நீளம் என நடுவர்களால் தெரிவுசெய்யபட்டு பெறுமதிமிக்க பரிசில்கள் ஒவ்வொரு முறையும் வழங்கப்படும்.ஒவ்வொரு முறையும் வித்தியாசம் வித்தியாசமான பட்டங்கள் கலந்து கொள்ளும், என்ன இருந்தும் ஆரம்ப காலங்களில் இருப்பது போன்று இருப்பதில்லை, இம்முறை பொங்கல் பானை,பாறாத்தல்,கொக்கு,சுழலும் இரட்டை பெட்டி, 60 அடி(?) பாம்பு பட்டம்,கிபீர்,டிராகன் உள்ளிட்ட பட்டங்கள் கலந்து கொண்டிருந்த போதிலும் காலத்தின் கோலமோ என்னமோ தெரியவில்லை, சிறுவன் ஒருவனால் பியர் டின் பட்டமும் கொண்டுவரபட்டிருந்தது.



















Thursday, January 12, 2012

நண்பன்-ஆல் இஸ் வெல்

இன்று முதல் நாள் முதல் ஷோ முதல்முதலாக விஜய் படம் பார்க்க சென்று இருந்தேன், மேலும் 3 இடியட்ஸ் ஹிந்தியில் கைப்பற்றிய மாபெரும் வெற்றி மேலும் ஷங்கர் படம்,ஏலவே வெளிவந்து ஹிட் ஆன பாடல்கள் என்று மாபெரும் எதிர்பார்ப்புகளுடன்தான் சென்று இருந்தேன். ஆனால் எந்தவித ஏமாற்றத்தையும் அளிக்காது முற்று முழுதாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தது.
 
உங்களுக்கு கதை சொல்லவேண்டிய அவசியம் இல்லை 3 இடியட்ஸ் ரீமேக்தான்.தமிழ் பதிப்பில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா, சத்யன் , சத்தியராஜ்,எஸ்‌ஜெசூரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இயக்கம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தெய்வதிருமகள் விஜய் போல கதை, தான் என்று போடாமல் தனது இயக்கத்தின் மூலமாகவே எல்லோரையும் கட்டி போட்டுஇருக்கிறார். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா அபாரமாக செய்திருக்கிறார் பாடல் காட்சிகள் ரசிக்க வைத்தன.

மேலும் முதலே கவர்ந்த பாடல்களான அஸ்கு லஸ்கா,ஜெல்லி பெல்லி பாடல்கள் காட்சி அமைப்பின் பின் மேலும் பிடித்து தொலைக்கின்றன. அதிலும் அஸ்கு லஸ்காவில் வரும் மாடர்ன் சாங்க்,ரோயல் சாங்க்,குத்து பாடல் என்று காண்பிப்பதன் மூலம் ஷங்கர் தனது பிம்பத்தை உடைத்துள்ளார்.அடுத்து ஜெல்லி பெல்லி இலியானாவின் இடுப்பாட்டம் ரொம்பவே கலக்கலாக உள்ளது. விஜய் பற்றி பாடல் காட்சிகளில் சொல்லவே தேவையில்லை அந்த மாதிரி கலக்கி உள்ளார். மேலும் சத்யன் நிகழ்த்தும் அந்த வரவேற்புரை சிரித்து சிரித்து முடியவில்லை.கலவி-கல்வி,கற்ப்பித்தல்-கற்பழித்தல் சரியாக பொருந்தி போகிறது. மேலும் காதல் வந்தால் எப்பிடி இருக்கும் என்று விஜய் இலியானாவிடம் சொல்லும்போது அதுக்கு இலியானா இதெல்லாம் ஷங்கர் படங்களில் மட்டும்தான் என்று கூறும்போது திரையரங்கில் என்ன வரவேற்பு.



விஜய் அபாரமாக நடித்துள்ளார் அதே போலவே ஸ்ரீகாந்த்,ஜீவா,அந்த மில்லிமீட்டர் பையன்,சத்தியராஜ்,இலியானா,அனுயா என அனைவரும் கலக்கியுள்ளனர். கேடி படத்தில் அறிமுகமாகிய இலியானாவுக்கும் இப்போதும் நிறைய வித்தியாசம், விஜய்க்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இவ்வாண்டு கல்யாணகோலத்தில் வந்துபோவார். பெல்லி டான்ஸ் அருமையாக செய்துள்ளார். மொத்தத்தில் நண்பன் விஜய்,ஷங்கருக்கு மாபெரும் வெற்றி. ஷங்கரிடம் இருந்து எந்திரன் போன்ற படங்களை விட நண்பன் போன்ற படங்களையே எதிர்பாக்கிறேன்.இன்றுதான் தியேட்டரில் எனது வாழ்நாளில் முதல்முதலாக சிரிச்சு,ரசித்து ஆத்ம திருப்தியாக படம் பார்த்தேன்.


                                                                 



















                             


















                                                                                                                                                               

Monday, January 2, 2012

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-2

 ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.நாங்கள் கப்-சிப் என அமைதியானோம்.சபாநாயகர் ஜனா எங்களை எச்சரிக்கை செய்தார்.எங்களுக்கு வந்ததே ஒரு கோபம், எனினும் அடக்கிகொண்டு நானும் மைந்தன் சிவாவும் பிளான் போட்டோம் இங்க இருக்கிற செங்கோலை ஒரு நாள் சுட்டுட்டு போய் எமது திறமையை நிரூபிக்கோனும் என்று.
                                         அடுத்து சபாநாயகர் மூத்த பதிவர்,முதியோர் நலன்,சுற்றுலா அமைச்சர் கானபிரபாவை உரையாற்ற அழைத்தார்.கானபிரபா அண்ணனும் தான் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறோம் என்பதை மறந்து ட்விட்டரில் இருப்பதாய் எண்ணி காலை இனிதே விடிந்தது  என்று பேச்சை ஆரம்பித்தார் சபையினர் எல்லோரும் கல கலவென சிரித்தனர் அப்போ தொல்லியல்,கலாச்சார அமைச்சர் மெர்வின் போன்று சொசெசூ காரியங்களில் ஈடுபடும் இன்னோர் மூத்த பதவி பதிவர் வந்தியதேவனும் பாராளுமன்றத்தில் இருப்போம் என்பதை உணராது பெரியப்பூ இப்ப விடிஞ்சு நேரமாச்சு என்றார், ஏலவே பாராளுமன்றத்தில் மாறி பேசிவிட்டோம் என்று கடுப்பில் இருந்த கானபிரபா அண்ணனுக்கு வந்தியதேவன் பெரியப்பூ என்று கூறி தனது வயதை வெளிக்காட்டி விட்டார் என்று மேலும் கடுப்பில் இருந்தார்.இருந்தும் தன்னை சுதாகரித்து கொண்டு பேச்சை தொடர்ந்தார், நாட்டிலுள்ள முதியவர்கள் உடல்நலத்துடன்  வாழ நாடு முழுதும் ஜிம் பயிற்சி நிலையங்கள் அமைத்து காலையும் மாலையும் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தான் இவ்வாறு ஜிம் செய்வதால் இப்போதும் இளமையாக இருப்பதாக கூறி முதியவர் என சபைக்கு தெரியவந்தாலும் இள ரத்தமாக காட்ட இப்படி பீலா விட்டார். மேலும் சுற்றுலா அமைச்சும் தன்னுடையது என்பதால் அது தொடர்பாக தொடர்ந்து பேசினார் தான் இப்படி இளமை துள்ளலாக இருப்பதால்தான் பாங்கொங்க் அங்கு இங்கு என்று பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தன்னை கேரள கன்னியர்கள் பார்ப்பதாக கூறினார்.
                                                                                                                                                            இப்படியாக கானபிரபா அண்ணே உரையாற்றி முடிந்ததும் அடுத்து சபாநாயகர் போக்குவரத்து, பல்கலைதுறை அமைச்சர் அனுதினன் அவர்களை உரையாற்ற அழைத்தார்.வணக்கம் நண்பர்ஸ் என அனுதினன் தான் ட்விட்டரில் வந்து போறமாதிரி பேச்சை ஆரம்பித்தார், அப்போ இடைமறித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் இம்முறை பல்கலைதெரிவில் அநீதி இழைக்கப்ப்ட்டுளது இதுக்கு நீங்க என்ன பதில் அளிக்க போகின்றீர்கள் என சீரியஸ் ஆக கேள்வி கேட்டார் ஆனால் அனுதினனோ யார் வந்தால் நமக்கென்ன வரும் பிகர்களை சைட் அடிக்கோனும் நமக்கென்ன முடியுமோ அதைதானே பண்ணனும் நான் இந்த வருசத்தையே வெடிக்கு பயந்து ஒதுங்கும் பெண்களை சைட் அடிச்சே ஆரம்பிச்சேன் அப்ப இந்த வருஷம் கொண்டாட்டம்தான் என்று கூறினார், இதை கேட்ட சபாநாயகர் ஜனா என்னது பல்கலை அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பேசுகிறீர் என்று கேட்டார் அதுக்கு அனுதினன் 
என் சில நண்பர்கள் அநியாயத்துக்கு நல்லவர்களாகஇருப்பதால், என்னையும் அப்படியே பாக்கிறார்கள். #நான்_பொறுப்பல்ல என்று தனது பாணியில் பதில் அளித்தார். சரி இதை விடும் உமது அடுத்த அமைச்சு போக்குவரத்து துறை பற்றி பேசுவோம் என்று கூறினார். தனதுரையை தொடர்ந்த அனுதினன் ஆமாம் நான் இந்த அமைச்சை மிகவும் கவனமாக கையாளுகிறேன் நான் பஸ்ஸில்  எல்லா இடமும் செல்லும்போதும் சந்திக்கு சந்தி அப்டேட் கொடுத்து கொண்டிருக்கிறேன் அப்ப பதிவர் வந்தியதேவன் அப்ப என்ன நீர் பஸ் மாமாவா என கேட்க சபையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

தொடரும்.......

Saturday, December 31, 2011

இலங்கை பாராளுமன்றில் பதிவர்கள்-1

முற்குறிப்பு-இப்பதிவு முற்றுமுழுதாக நகைச்சுவை உணர்வோடே   எழுதப்படுகிறது. இதில் வரும் பதிவர்கள் மனம் ஏதும் நோகும்படி இருந்தால்,கூறினால் நீக்கப்படும்.

நாட்டிலே இருக்கும் அரசியல் கட்சிகளால் ஏதும் பயனில்லை என்று உணர்ந்த மக்கள் அடுத்த நடைபெற்ற தேர்தலில், பதிவுலகில் நடைபெறும் அரசியல்களை எல்லாம் பார்த்த மக்கள் இதை விட மிகச்சிறப்பாக அரசியல் நடத்தகூடியவர்கள் வேறு ஒருத்தரும் இல்லை என்பதை உணர்ந்து பதிவர்களையே பாராளுமன்றிற்கு தெரிவு செய்கிறார்கள்.


                                                                                       பதிவர்கள் எல்லோரும் பாராளுமன்றில் வீற்றிருக்கின்றனர். அப்போது சபாநாயகர் பதிவர் ஜனா பாராளுமன்றில் வருகை தருகிறார் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கின்றனர் அப்போது பதிவர்,மகளிர் விவகாரதுறை அமைச்சர் மருதமூரான் மட்டும் சபாநாயகர் வருவதையே உணராது தொலைபேசியில் பேஸ்புக் அரட்டையில் தேவதைகளுடன் ஒரு பக்கம் மிதந்து கொண்டு மறுபுறம் காதல்ரசம் சொட்டும் ஸ்டேட்டஸ்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்.திடீர் என்று சபாநாயகர் வருவதை உணரந்து எழுந்து நிக்கிறார்.சபாநாயகர் சென்று தனது ஆசனத்தில் அமர்ந்ததும் அவை தொடங்குகிறது. பதிவுலகில ஆணாத்திக்கம் என்று பல பேர் அடிக்கடி குறைபட்டு கொள்வதால் சபாநாயகர் முதலில் மகளிர் விவகார துறை அமைச்சர் மருதமூரானை உரையாற்ற அழைக்கிறார். மருதமூரான்  "விலகியோடும் குழந்தையை சுற்றியிருக்கும் தாயின் அக்கறை மாதிரி, 'காதல்' மீதான அக்கறையும் அது இழக்கப்படும் சந்தர்ப்பங்களில் தான் அதிகரிக்கிறது!! " என்று தான் பாராளுமன்றில் நிக்கிறோம் என்பதை உணராது பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடும் நினைப்பில் உரையாற்றுகிறார். மற்ற உறுப்பினர்களும் ரசித்து கொண்டிருக்க பதிவர் சினிமாதுறை அமைச்சர் ஜீ எழுந்து யோவ்வ் இங்க என்ன நடக்குது என்று பெண்கள் மேல் உள்ள வெறுப்பால் கத்த அப்போதுதான்   அரசாங்க பிரதம கொறடா அதிகார மையம் நிருஜா எழுந்து என்ன மருதமூரான் சம்பந்தம் இல்லாமல் கதைக்கிறீர் அமரும் என்கிறார்.

                                                                                                                                             அதை தொடர்ந்து சபாநாயகர், தன்னை (எதிர்க்கட்சி தலைவர் ) பேச அழைப்பார் என்று எதிர்பார்த்த நிரூபனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது சபாநாயகர் எதிர்க்கட்சி பிரதம கொறடா,சமய விவகார அமைச்சர் பதிவர் ஐடியாமணி அவர்களை அழைத்தார். ஐடியாமணியும் எழுந்து மனிதஉரிமைகள் காக்க படவேணும் கல்லால் எறிந்து கொள்ளவது தடைசெய்ய படவேணும், ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை வழங்கபடவேணும் அனைத்து பெண்களும் முகம் தெரியுமாறு செல்லவேண்டும்,முக்காடு போடக்கூடாது என்று சீரியஸ் ஆக கதைத்து கொண்டிருக்க பின்வரிசையில் கும்மி அடித்து கொண்டிருந்த நான்,மைந்தன் சிவா,பொட்டலம் கார்த்தி ஆகியோர் ஆமாண்ட மச்சான் அப்பத்தானே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கலாம் என்று கைதட்டி ஆரவாரம் செய்தோம்.அப்போ சீரியசா உரை நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் ஆரவாரம் செய்ததால் எல்லோரும் ஒரு முறாய்ப்போடு எங்களை பார்த்தார்கள்.


தொடரும்......


நேரம் இன்மையால் பதிவு குறுகிவிட்டது மன்னிக்கவும்.

Tuesday, November 22, 2011

பிரகாசிக்கும் இளம் நட்சத்திரங்கள்

இந்த பருவ காலத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக இளம் வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். முக்கியமாக டெஸ்ட் போட்டிகளில் எனவேதான் இப்போதும் டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன. எந்த இளம் வீரர்கள் சாதித்ருக்கிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.

1.பற் கம்மின்ஸ்
18 வயதேயான கட்டிளம் காளையான இவர் இந்த தென்னாபிரிக்காவுக்கான தொடரிலேயே T20,ஒருநாள்,டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார். முதலிரண்டு T20 போட்டிகளிலேயே தனது அதிவேகத்தால் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்து 5 விக்கெட் கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலும் அறிமுகத்தை மேற்கொண்டு 5 விக்கெட் கைப்பற்றியிருந்தார். எனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் அணியை தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கு மிக நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தார். இறுதி நேரத்தில் அணியில் இடம் பெறாமல் போனார் இவர் உடல்நிலை டெஸ்ட் போட்டிகளுக்கு ஒத்துளைக்குமா என்றும் கேள்வி எழுப்பட்டது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஹாரிஸுக்கு பதிலாக இடம் பெற்றார். முதல் இன்னிங்சிலேயே சிறப்பாக பந்து வீசினார் இவரது லைன்&லெந்த் சிறப்பாக இருந்தது ஆனாலும் ஒரு விக்கெட்டே  கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்சில் மிகச்சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை சாய்த்த்தது மட்டுமில்லாமல் இறுதி நேரத்தில் துடுப்பாட்டத்திலும் கை கொடுத்து ஆஸி அணியின் வெற்றிக்கு துணை புரிந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் உயரமாக இருப்பதால் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பெறுவதும் இலகு, தொடர்ச்சியா140Km/h என்றவேகத்தில் பந்து வீசுவது கூடுதல் பலம். மிக இளம் வயதை கொண்டிருப்பதால் நிறைய சாதிப்பதுக்கு வாய்ப்பு உண்டு எதிர்கால ஆஸி அணியின் பந்துவீச்சு தலமைஆயுதமாக வர்ணிக்க படுகிறார்.



2.வெரோன் பிளண்டர்
இவர் 2007 கால பகுதியில் தென்னாபிரிக்க அணிக்காக T20,ஒருநாள் போட்டிகளில் சகலதுறை ஆட்டக்காரராக அறிமுகத்தை மேற்கொண்டு இருந்தாலும் அந்நேரம் அவ்வளவாக சாதிக்கவில்லை.இருந்தும் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சாதித்து வந்ததால் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்தார். ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் டொஸ்டோபேயை பின்னுக்கு தள்ளி விட்டு அணியில் வாய்ப்பு பெற்றார். ஆரம்பத்தில் இவரது உள்ளடக்கம் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.ஆனாலும் இவரது சொந்த மைதானம் என்பதால் இவருக்கு சாதகமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் கைப்பற்றிய இவர் இரண்டாவது இன்னிங்சில் ஆஸி அணியை உருட்டி எடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டேய்ன் போன்று வேகமாக இல்லாவிட்டாலும் நேர்த்தியாக பந்து வீசியதால் விக்கெட் வேட்டை நடாத்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரண்டாவது போட்டியிலும்முறையே 1,5 விக்கெட் கைப்பற்றினார். இப்போது தென்னாபிரிக்காவுக்கு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரும் கிடைத்து விட்டார் இப்போது அச்சுறுத்தும் வேகப்பந்து கூட்டணியை கொண்டு உள்ளது.


3.ஜூனைட் கான்
21 வயதேயான இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் தனது டெஸ்ட் அறிமுகத்தை ஜிம்பாப்வே அணிக்கெதிராக மேற்கொண்டிருந்தார் . ஆனால் அந்த போட்டியில் சாதிப்பதுக்கு போதியளவு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அடுத்து நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மத்திய கிழக்கு தட்டை ஆடுகளங்கிலேயே 12 விக்கெட்களை கைப்பற்றினார். இவரது லைன்& லெந்த் சிறப்பாக உள்ளது மேலும் இவரும் தொடர்ச்சியாக வேகமாக பந்து வீசுகிறார். பாகிஸ்தான் மட்டும் எப்படியோ வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் அக்ரம்,ஆமிர்,தன்வீர் வரிசையில் இப்போ இவர். இவரும் மிக இளம் வயதேயே கொண்டிருப்பதால் சாதிக்க நிறைய உண்டு.

.

4.கேர்க் எட்வர்ட்ஸ்
27 வயதான இவர் மேற்கிந்திய அணிக்காக விளையாடுகிறார். அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கெதிராக சதமடித்தவர். இப்போது ஆறு போட்டிகளில் 2சதம் 3 அரைச்சதம் உட்பட 61.88 என்ற மிகச்சிறந்த சராசரியில் 557 ஓட்டங்களை குவித்துள்ளார். மீள கட்டி எழுப்பபட்டு கொண்டிருக்கும் மேற்கிந்திய  அணிக்கு முட்டு கொடுக்கும் ஒரு தூணாக இருந்து வருகிறார்.




5.ரவிசந்திரன் அஷ்வின்
25 வயதான இவர் ஒருநாள்,T20 போட்டிகளில் போன வருடம் அறிமுகமாகி முறையே 35,4 விக்கெட்களை வீழ்த்தி தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளை வழங்கி டெஸ்ட் அணியின் கதவுகளை தட்டிய வண்ணமே இருந்தார். இப்போதுதான் ஹர்பஜனின் மோசமான போர்ம் காரணமாக அணியில் இடம் கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட அஷ்வின் முதல் போட்டியிலேயே 3,6 விக்கெட்களை முறையே ஒவ்வொரு இன்னிங்சில் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இப்போது நடந்து கொண்டிருக்கும் தொடரில் 15 விக்கெட்களை இதுவரை கைப்பற்றி ஆஸி தொடருக்கு செல்லும் அணியில் தனது இடத்தை உறுதிபடுத்தி இருக்கிறார். ஆனால் இவருக்கு அங்குதான் சவால் காத்திருக்கிறது, இந்திய ஆடுகளங்கள் வழமையாகவே சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பவை ஆஸியில்தான் இவரின் மீதி திறமைகள் தெரியும்.



















மேலே குறிப்பிட்டவர்களை தவிர இந்த பருவ காலத்தில் ஆஸி அணிக்காக மிட்செல் மார்ஷ்,இந்திய அணிக்காக வருண் ஆரோன் ஆகியோர் அறிமுகம் புரிந்துள்ளனர். மிட்சல் மார்ஷ் ஆஸி அணியில் எதிர்காலத்தில் சைமோண்ட்ஸ் இடத்தை நிரப்புவார் என எதிர்பாக்கிறேன். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த வாரம் கூட உள்ளூர் போட்டியொன்றில் மிகச்சிறப்பாக பந்து வீசியிருந்தார்.மேலும் இறுதி நேரங்களில் அடித்தாடக்கூடிய துடுப்பாட்ட வீரரும் கூட. அடுத்தவர் ஆரோன் இந்தியாவிலேயே மிக வேகமாக பந்து வீசுபவர் என்ற ரீதிலேயே வந்துள்ளார் அணிக்குள், இவரது உள்ளூர் போட்டிகளின் பெறுபேறுகள் கூறிக்கொள்ளும்படியாக இல்லை. இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அறிமுமாகி இன்று நடைபெறும் மேற்க்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகி இருக்கிறார். இன்றைய போட்டியில் இவர் அதிகளவான ஷாட் பிட்ச் பந்துகளையே வீசுகிறார், அருமையாகவே நேர்த்தியான பந்துகளை வீசுகிறார் கவாஸ்கார் கூறியது போன்று முதல் நாள் பதட்டமாக இருக்கலாம், மும்பை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை. இவரையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Thursday, October 27, 2011

ரா-ஒன்

வேலாயுதம்,ஏழாம்அறிவு இரண்டு படமும் பார்தாச்சு இன்று ரா-ஒன் பார்ப்பம் என்று மஜெஸ்டிக் சிட்டி திரையரங்குக்கு சென்று இருந்தேன் இதுதான் நான் முதன் முதலாக திரையரங்கில் பார்க்கும் ஹிந்தி படம்.என்றாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே சென்று இருந்தேன். ஏனெனில் கிட்டடியில் கிடைத்த அனுபவம்.
  
                        படத்தின் கதை இதுதான் ஷாருக்கான் ஒரு கணனிவிளையாட்டுக்கள் உருவாக்கும் நிறுவனத்தில் லண்டனில் வேலை செய்கிறார்.ஷாருக்கான்,கரீனா கபூர் திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறான்.அவன் பாடசாலையில் கல்வி கற்கிறான்.இந்த நேரத்தில் ஷாருக்கான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு புதிய கணனி விளையாட்டை உருவாக்கும் செயற்றிட்டம் வருகின்றது ஷாருக்கான் தலைமையில் கணனி விளையாட்டு உருவாக்கிறார்கள்.அதில் உருவாகும் வில்லன் நிஜத்திலேயே உலகத்துக்கு வந்து விளையாட்டை உருவாக்கிய ஷாருக்கானை கொன்று விடுகிறான்.அந்த வில்லன்தான் ரா-ஒன் இதை தடுக்க ஜி‌-ஒன் வந்து எப்புடி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ளார்கள்.எப்படி ரா-ஒன்னை அழித்து யாரை காப்பாற்றுகிறார் என்பதை திரையில் கண்டு கொள்ளுங்கள்.



                                                                        ஷாருக்கான் கொடுத்த விளம்பரங்கள் வீண் போகவில்லை நிச்சயமாக படம் வசூலில் முன்னுக்கு வரும்.ஷாருக்கான் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்.அவரின் மகனான நடிக்கும் சுட்டி பையனும் நன்றாக நடித்து உள்ளான். ஆனால் இந்த சுட்டி பையனுக்கு இவ்வளவு திறமை இருக்குமா என்றது லாஜிக் மீறல். கரீனா கபூருக்கு இப்போ ஒரே ஏறுமுகமாக இருக்கிறது அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். பாடல்கள் ஏலவே வந்து ஹிட் ஆகினாலும் திரைஅமைப்போடு சேர்ந்து மேலும் ஹிட் ஆகும். ஏகோன் பாடிய இரண்டு பாடலிலும் கரீனா,ஷாருக்கின் நடனஅசைவுகள் சூப்பர்.சண்டைக்காட்சிகள்
அட்டாகாசமாக படமாக்கியுள்ளார்கள். ரயில் காட்சி,லண்டன் வீதியில் படமாக்கிய காட்சி என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.அட மறந்திட்டன் ரஜினியும் ஒரு காட்சியில் வந்து போகிறார ஆனால் ஊடகங்கள் எழுதியது போன்று ஷாருக்கை காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக இல்ல. சில ரஜினி அடிபொடிகள் சொல்லுவது போல ரஜினிக்காண்டிதான் படம் ஓடும் என்பது வீண் பேச்சு.ஆனால் ரஜினிக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கிற்றார் ஷாருக்.

                     இந்த பதிவு யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் இருந்து எழுதிகொண்டு இருக்கிறேன் படம் இன்று பின்னேரம் பார்த்த்வுடன் விம்ர்சனம் எழுத  வேண்டும் என்ற அவாதான் உடனே பதிவு இட தூண்டியது. இப்ப பஸ்ஸில் ஏழாம் அறிவு போடுகிறார்கள். மொத்தத்தில் தீபாவளிக்கு வந்த ஏழாம் அறிவு திரைக்கதையின் வேகமின்மையாலும்,வேலாயுதம் இரண்டாம் பகுதி மறுபடியும் வழமையான விஜய் படத்தை நினைவு படுத்தியதாலும் ரா-ஒன் இரண்டையும் முற்றுமுழுதாக விழுங்கி விட்டது நான் ஹிந்தியில் ஆங்கில உபதலைப்புகளுடன் பார்த்தேன்.